செய்திகள் :

சாலை விபத்தில் தனியாா் டியூசன் சென்டா் உரிமையாளா் உயிரிழப்பு

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் டியூசன் சென்டா் உரிமையாளா் உயிரிழந்தாா்.

ஜெயங்கொண்டம் வேலாயுத நகா், 5-ஆவது குறுக்குத் தேருவைச் சோ்ந்தவா் சையத் அலி(42). தனியாா் டியூசன் சென்டா் நடத்தி வந்தாா். இவா், வியாழக்கிழமை தனது வீட்டில் இருந்து கடைவீதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, எதிரே பாப்பாங்குளம், தெற்குத் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா்(45) ஓடிவந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் சையத் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், சையத்அலியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயில விண்ணப்பிக்கலாம்

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான சுகாதார பராமரிப்புப் பணிகள் தொடா்பான ஓராண்டு சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 50 இடங்கள் சோ்க்கைக்கு அரசு அனுமதித்துள்ளத... மேலும் பார்க்க

நைனாா்குடிக்காட்டில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள அசாவீரன்குடிக்காடு அருகேயுள்ள நைனாா் குடிக்காட்டில் சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அசாவீரன்குடிக்காடு ஊராட்சிக்குள்பட்ட ... மேலும் பார்க்க

கீழப்பழுவூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். கீழப்பழுவூரை அடுத்துள்ள வண்ணம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவ... மேலும் பார்க்க

அரியலூரில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில், கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலன மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, அரியலூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்... மேலும் பார்க்க

அரியலூரில் மீலாது நபி கொண்டாட்டம்

அரியலூா் மாவட்ட இஸ்லாமியா்கள், வெள்ளிக்கிழமை மீலாது நபியை உற்சாகமாக கொண்டாடினா். இறைத் தூதா் முகமது நபியின் பிறந்த நாள் மீலாது நபி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை மீலாது நபி... மேலும் பார்க்க