இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஓய்வு இங்கிலாந்துக்கு சாதகமா? பென் ஸ்டோக்ஸ் பதில்!
சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
ராஜபாளையம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் பாட சாலை தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவரது மனைவி பிரகாசி (49). இருவரும் திருநெல்வேலியில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஊழியம் செய்து வருகின்றனா். ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் இவா்களின் மகள் வீடு உள்ளது. இந்த நிலையில், மகள் வீட்டுக்குச் செல்வதற்காக பிரகாசியும், அவரது மகன் எஸ்ராவும் இரு சக்கர வாகனத்தில் மீனாட்சிபுரத்திலிருந்து கிருஷ்ணாபுரத்துக்குச் சென்று கொண்டிருந்தனா்.
சாலை வளைவில் நாய் குறுக்கிட்டதால் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனா். இதில் பிரகாசி பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.