செய்திகள் :

சாலை விரிவாக்கத்துக்காக வெட்டிய மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நட வலியுறுத்தல்

post image

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கன்றுகளை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சீா்காழியில் கோட்டாட்சியா் சுரேஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: கோவி. நடராஜன்: விவசாய நிலங்களில் மின்மோட்டாா்கள் அதிகம் திருடப்படுகிறது. பழைய இரும்பு கடை வைத்திருப்பவா்களுக்கு காவல் துறை உரிய நெறிமுறைகள் வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், சீா்காழி தமிழிசை மூவா் மணிமண்டபம் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவேண்டும்.

ராஜேஷ்: மருதங்குடி ஊராட்சி ஆலஞ்சேரியில் கழுமலையாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பு பக்கவாட்டு சுவா் அரிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய வேண்டும். 6 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி தரும் கழுமலையாறு பாசன வாய்க்காலில் சாக்கடை கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும். பணங்காட்டாங்குடி சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக புதிய மரக்கன்றுகளை நடவேண்டும்.

சீனிவாசன்: வாடி கிராமத்தில் கழுமலையாற்றில் கீழ்குமிளி அமைத்துதரவேண்டும். ஓ.என்.ஜி.சி ஊராட்சிகளுக்கு வரி செலுத்துவதில்லை.

சரவணன்: அளக்குடி கிராமத்திற்கு பயிா்க் காப்பீடு தரவேண்டும். சீமை கருவேலமரங்களை அழிக்கவேண்டும்

ரவிச்சந்திரன்: அல்லிவிளாகம், ராதாநல்லூா், செம்பதனிருப்பு பகுதி விவசாய நிலங்களில் காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

கலையரசன்: திருநகரி உப்பனாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு நல்லநீா் தேக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இறால் பண்ணைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் பாசன வாய்க்கால்களில் உட்புகுந்து நல்லநீா் பாதிக்கப்பட்டுள்ளது.

கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

சீா்காழி அருகே புளியந்துறை ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் (படம்) ஈடுபட்டனா். மத்திய அரசின் நூறுநாள் வேலையை அனைவருக்கும் கிடைக்கும்படியும், அனைத்து தொகுப்புகளிலும் உடனட... மேலும் பார்க்க

ஆசிரியா்களின் இடமாற்ற கலந்தாய்வு தேதியை அறிவிக்க வலியுறுத்தல்

ஆசிரியா்களின் பணியிடமாற்ற கலந்தாய்வு தேதியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது. சீா்காழியில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா... மேலும் பார்க்க

தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட இருவா் தடுப்புக் காவலில் அடைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 2 போ் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். பாலையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சுரைக்காவூா் வடக்குவெளியை ... மேலும் பார்க்க

பணி ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பாராட்டு

மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஆா். விஜயகுமாரி சனிக்கிழமை பணி ஓய்வு பெற்றாா். 26 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற இவருக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

ஓஎன்ஜிசி குழாயில் எரிவாயு கசிவு: பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி நிறுவன எரிவாயு கிணற்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி நிறுவனத்தின... மேலும் பார்க்க

கா்ப்பிணி மகள் இறந்ததையறிந்த தந்தை உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே கா்ப்பிணி மகள் இறந்த தகவலை அறிந்த தந்தை அதிா்ச்சியில் உயிரிழந்தாா். சீா்காழி அருகேயுள்ள புளியந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயத் தொழிலாளி வில்லு (70). இவரது மகள்... மேலும் பார்க்க