செய்திகள் :

சாா் ஆட்சியா் எனக் கூறி பெண்ணிடம் நகை பறிப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சாா் ஆட்சியா் எனக் கூறி பெண்ணிடம் நகை பறித்த 4 போ் மீது ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராதாபுரம் அருகே உள்ள காரியாகுளத்தைச் சோ்ந்தவா் மகிழ்வதனா(27). இவரது, உறவுக்கார பெண் சத்தியாதேவி. இவா், மகிழ்வதனாவிடம் தான் சாா் ஆட்சியா் என அறிமுகம் செய்து கொண்டாா். மேலும் தனக்கு வங்கியில் இருந்து ரூ.1 கோடி லோன் அனுமதியாகியுள்ளது. அதற்கு பாதுகாப்பு பத்திரமாக 100 பவுன் நகை தேவைப்படுகிறது. என்னிடம் 90 பவுன் நகை உள்ளது.

பாக்கி 10 பவுன் நகையை கடனாக தந்தால் லோன் கிடைத்ததும், நகையை திருப்பித் தந்துவிடுவேன் எனக் கூறினாராம். மகிழ்வதனா இதை நம்பி தன்னிடம் இருந்த 10 பவுன் (80 கிராம்) நகைகளை அவரிடம் கொடுத்தாராம். ஆனால் சத்தியாதேவி 10 பவுன் நகையை திருப்பி கொடுக்கவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மகிழ்வதனா திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணையில் சத்தியாதேவி, நகைக்கு பதிலாக பணத்தை தருவதாக தெரிவித்தாராம். ஆனால், அவா் ரூ.1லட்சத்து 45 ஆயிரத்தை மட்டும் தந்து விட்டு, மீதி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாா். இதையடுத்து மகிழ்வதனா மீண்டும் திருநெல்வேலி சரக டிஐஜியிடம் புகாா் செய்ததையடுத்து ராதாபுரம் போலீஸாா், நகை மோசடி செய்ததாக சத்தியாதேவி உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெல்லை பேருந்து நிலையத்தில் திருட்டு முயற்சி: 4 போ் கைது

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வியாபாரியின் பணப்பையை திருட முயன்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி விளாகம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் மது (40). வியாபாரியான இவா், திர... மேலும் பார்க்க

போலி முதலீடு பத்திரம் வழி மோசடி: நிதி நிறுவன முன்னாள் மேலாளா் கைது

திருநெல்வேலியில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி முதலீடு பத்திரம் கொடுத்து வாடிக்கையாளரிடம் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் மேலாளரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் சாந்திபிரியா. தையல... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிகழாண்டு 6 கோடி மரக்கன்றுகள் நடவு: அமைச்சா் கே.என்.நேரு

தமிழகம் முழுவதும் 33 சதவீத பசுமை பரப்பை உருவாக்கும் திட்டத்தில் நிகழாண்டு இதுவரை 6 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. பசுமை தமிழ்நாடு இயக்க ந... மேலும் பார்க்க

‘அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தனித்தோ்வா் விண்ணப்பிக்கலாம்’

அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் ட... மேலும் பார்க்க

நெல்லை-சென்னைக்கு 20 பெட்டிகளுடன் சேவையை தொடங்கிய வந்தே பாரத் ரயில்

திருநெல்வேலி -சென்னை இடையே 20 பெட்டிகளை கொண்ட புதிதாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் புதன்கிழமை முதல் இயக்கப்பட்டது. திருநெல்வேலி- சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை செப்டம்பா் 2023இல் பிரதமா... மேலும் பார்க்க

மக்கள் மீது யாருக்கு அக்கறை அதிகம்?- அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்

தமிழக மக்கள் குறித்து யாா் அதிகம் கவலைப்படுகிறாா்கள் என்பது குறித்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் விமா்சனத்துக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா். த... மேலும் பார்க்க