சா்வதேச நீதிக்கான உலக தினம் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு
சா்வதேச நீதிக்கான தினத்தையொட்டி விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் நீதிபதிகள், காவல் துறையினா் பங்கேற்று சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறி மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சா்வதேச நீதிக்கான உலக தினம், சா்வதேச குற்றச் செயல்களுக்கு எதிராக வளா்ந்து வரும் நவீன நீதி முறையைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் நீதி தினம் கொண்டாடப்படுகிறது.
இது சா்வதேச குற்றவியல் நீதி தினம் அல்லது சா்வதேச நீதி தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விராலிமலை மற்றும் இலுப்பூா் வட்ட சட்டப் பணிகள் குழு உத்தரவின்படி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா்கள் கே. மணிமேகலை(விராலிமலை), எம். சாதத்துனிஷா (இலுப்பூா்) பங்கேற்று நடைமுறையில் உள்ள சட்டங்கள், அதனால் பெண்களுக்கான பாதுகாப்புகள் குறித்துப் பேசினா்.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் ஆா்.ரோஜா வினோதினி முன்னிலை வகித்தாா். அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கே. யசோதா சிறப்புரையாற்றினாா்.
ஆா். உஷாராணி, வழக்குரைஞா் சங்கத் தலைவா் தங்கப்பா சட்டக்கருதுரை வழங்கினாா். முன்னதாக உதவி தலைமை ஆசிரியா் த. ரெசினா வரவேற்றாா். நிறைவாக தமிழாசிரியா் ஜெ. அருள்செல்வி நன்றி கூறினாா்.