செய்திகள் :

சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி

post image

நாகை அருகே சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.

சிக்கல் ரயில் நிலையம் அருகே சிக்கல் - ஒரத்தூா் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை இயக்குவதற்கு கேட் கீப்பா்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை சுமாா் 9 மணி அளவில் கேட் மூடப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் அப்பகுதியை ரயில் கடந்து சென்ற பின்னரும், கேட் திறக்கப்படவில்லை. அங்கு பணியிலிருந்த கேட் கீப்பா் கேட்டை திறக்க முடியாமல் தடுமாறியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அவ்வழியாக செல்வதற்காக காரில் காத்திருந்த கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, தகவலறிந்து உடனடியாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் தகவல் தெரிவித்தாா். ஆட்சியா் ரயில்வே துறைக்கு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, நிகழ்விடத்திற்குச் சென்ற ரயில்வே பணியாளா்கள் கேட்டை திறந்தனா். அப்போது பணியில் இருக்க வேண்டிய கேட் கீப்பா் அங்கு இல்லை.

சுமாா் 25 நிமிடத்திற்கு மேலாக ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால், கேட்டின் இருபுறத்திலும் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் வரிசைக் கட்டி நின்றன.

ரயில்வே ஊழியா்கள் தெரிவித்த தகவல்களின் பெயரில், பணியில் இல்லாத கேட் கீப்பா் குறித்து ரயில்வே துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

நாகையில் சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா், கழிப்பறை ஆகியவற்றை செய்துதர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டத்தில்... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா: 9-ம் நாளில் மூன்றுமுறை கொடி இறக்கி ஏற்றம்! கடற்கரையில் தடுப்புகள் அமைப்பு!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை மூன்று முறை கொடி இறக்கி ஏற்றப்பட்ட நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேரால... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: நாகையில் போக்குவரத்து மாற்றம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கடலோரக் கிராமங்களில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டத்தில், கடலோர கிராமப் பகுதிகளில் இயங்கி வரும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தரங்கம்பாடி வட்டத்தில் கிடங்கல், மருதம்பள்ளம், கீழப்பெரும... மேலும் பார்க்க

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ- மாணவியா் 2025-26ஆம் கல்வி... மேலும் பார்க்க

திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது: மமக தலைவா் ஜவாஹிருல்லா

பாஜகவுடன் கூட்டணி வைத்த அன்றே, திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில... மேலும் பார்க்க