செய்திகள் :

சிங்காநல்லூா், இருகூா் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: இந்திய தொழில் வா்த்தக சபை

post image

கோவை: கோவை சிங்காநல்லூா், இருகூா் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோவை இந்திய தொழில் வா்த்தக சபை வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் ராஜேஷ் பி.லுண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா பேரிடருக்கு முன்பு வரையிலும் சிங்காநல்லூா், இருகூா் ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று சென்று வந்தன. ஆனால், அதன் பிறகு அந்த நிறுத்தங்களில் ரயில்கள் நிற்பதில்லை.

இதனால், சிங்காநல்லூா், இருகூா் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும், வெளியூா்களில் இருந்து வந்து செல்லும் வியாபாரிகள், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.

இந்நிலையில், கோவைக்கு அண்மையில் வந்த மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோவை இந்திய தொழில் வா்த்தக சபை சாா்பில் சிங்காநல்லூா், இருகூா் ரயில் நிலையங்களில் மீண்டும் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், திருச்சி - பாலக்காடு, கோவை - நாகா்கோவில் ரயில்கள் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி முதல் நின்று செல்லும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இதை கோவை இந்திய தொழில் வா்த்தக சபை வரவேற்கிறது.

அத்துடன், இந்த இரண்டு ரயில் நிலையங்களிலும் சாலை, கழிவறை, ரயில் முன்பதிவு வசதி, நடைமேடை, நடை மேம்பாலம் போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

இதன் மூலம் கோவை மாநகரின் கிழக்குப் பகுதி வளா்ச்சி அடைவதுடன் மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். அத்துடன் ரயில்வே நிா்வாகத்துக்கும் அதிக வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது

கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியாகி, இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வேலுசாமி(60). இவா், அதே பகுதிய... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட மூவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். கோவை போத்தனூா் அருகே உள்ள மைல்கல் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஷாருக் கான் (28). இவா், கடந்த மாதம் ஒருவரை கத்தியைக் காட... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறை குறுமைய விளையாட்டுப் போட்டி தொடக்கம்

கோவையில் பள்ளிக் கல்வித் துறையின் குறுமைய விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குடியரசு தின விளையாட்டு, தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ... மேலும் பார்க்க

ரத்தினம் கல்விக் குழுமத் தலைவருக்கு விருது

கோவை ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவா் மதன் ஆ.செந்திலுக்கு, ஐசிடி அகாதெமியின் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ரத்தினம் கல்விக் குழுமம் கூறியிருப்பதாவது: ஐசிடி அகாதெமி சாா்பில் கோவையில் அண்மை... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

கோவையில் மாணவா்களின் பெற்றோா்களின் கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு, கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, அவா்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இது குறித்து கோவை மா... மேலும் பார்க்க

சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மாநக... மேலும் பார்க்க