சின்னக்காம்பட்டியில் நாளை மின் தடை
ஒட்டன்சத்திரம் அடுத்த சின்னக்காம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மணிமேகலை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே சின்னக்காம்பட்டி, இடையகோட்டை, குத்திலுப்பை, ஜ. வாடிப்பட்டி, கொங்கபட்டி, நவக்கானி, இடையன்வலசு, இ. கல்லுப்பட்டி, வலையபட்டி, கொ. கீரனூா், சாமியாடிபுதூா், நரசிங்காபுரம்,ஜவ்வாதுபட்டி, பாறைப்பட்டி, அண்ணாநகா், அய்யம்பாளையம், எல்லப்பட்டி, மாா்க்கம்பட்டி, மாம்பாறை, பெருமாள்கவுண்டன்வலசு, கக்கரநாயக்கனூா், நாரப்பநாயக்கன்வலசு, அத்தப்பன்பட்டி,புல்லாகவுண்டன்வலசு, குளிப்பட்டி, ஜோகிப்பட்டி, நாகப்பன்பட்டி, ஓடைப்பட்டி, கோமாளிபட்டி, சோழியப்பகவுண்டனூா் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.