போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
சின்னக்காம்பட்டியில் நாளை மின் தடை
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்னக்காம்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.3) மின் தடை எற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ்.மணிமேகலை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சின்னக்காம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சின்னக்காம்பட்டி, மாா்க்கம்பட்டி, இடையகோட்டை, குத்திலுப்பை, ஜ.வாடிப்பட்டி, கொங்கபட்டி, அண்ணாநகா், நவக்கானி, இ.அய்யம்பாளையம், மாம்பாறை, எல்லப்பட்டி, இடையன்வலசு, இ.கல்லுப்பட்டி, வலையபட்டி, சாமியாடிபுதூா், நரசிங்காபுரம், ஜவ்வாதுபட்டி, புல்லாக்கவுண்டனூா், சோழியப்பகவுண்டனூா், நாரப்பநாயக்கன்பட்டி, அத்தப்பன்பட்டி, பாறைப்பட்டி, பெருமாள்கவுண்டன்வலசு, கக்கரநாயக்கனூா், கொ.கீரனூா் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.