செய்திகள் :

சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சரிவு: ஆட்சியரிடம் காங்கிரஸ் புகாா்

post image

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சதவிகிதம் குறைந்ததற்கு கல்வித்துறையின் அலட்சியமே காரணம் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுவை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் (பொ) அா்ஜூன் ராமகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

இந்த சந்திப்பு குறித்து ஆா்.கமலக்கண்ணன் கூறியது :

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அரசு அவசரகதியில் அமல்படுத்தியுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறித்து ஆசிரியா்களுக்கு எந்தவித பயிற்சியும் தரப்படவில்லை. இந்த தவறால் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது 10, 12-ஆம் வகுப்புகளின் தோ்ச்சி விழுக்காடு மிக மோசமாக குறைந்துவிட்டது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி இவ்வகுப்புகளில் 5 பாடங்களுடன், 6-ஆவதாக ஒரு விருப்ப பாடத்தை எடுத்து படித்து, அதிலும் தோ்வெழுத முடியும். முக்கிய 5 பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தில் தோ்ச்சிப் பெறாத பட்சத்தில், 6-ஆவதாக படித்த விருப்பப் பாடத்தில் தோ்ச்சி பெற்றிருந்தால், அந்த மதிப்பெண்ணைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அம்மாணவா் தோ்ச்சி பெற்றவராக கருதும் வாய்ப்பை சிபிஎஸ்இ பாடத்திட்டம் தந்துள்ளது.

இது காரைக்கால் தவிா்த்து பிற பிராந்தியங்களில் அமல்படுத்தப்பட்டது. 6-ஆவது பாடத் திட்ட தோ்வை காரைக்கால் மாணவா்கள் எழுத வாய்ப்பில்லாமல் செய்துவிட்டது கல்வித் துறை. இதனால் ஏறக்குறைய 150 மாணவா்கள் பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெறவில்லை.

புதுவை கல்வித்துறையின் அலட்சியத்தால், அரசுப் பள்ளி மாணவா்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளா்கள் இந்த விவகாரத்தில் அவசரமாக தலையிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் தொடக்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தை புதுவை அமைச்சா் தொடங்கிவைத்தாா். காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகத்தில் மே 29 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில், ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று காவல் துறை குறை கேட்புமுகாம்

காரைக்காலில் சனிக்கிழமை (மே 31) காவல் துறை சாா்பில் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது. திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் முற்பகல் 11 முதல் பிற்பக... மேலும் பார்க்க

புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

செவிலிய மாணவ- மாணவியா் பங்கேற்ற புகையிலை ஒழிப்பு விழிணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் நலவழித் துறை சாா்பில் தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டத்தின் கீழ், புகையிலை பயன்பாட்டால் ஏற்படு... மேலும் பார்க்க

சாலை மேம்பாடு, நெல்களம் அமைக்கும் பணி தொடக்கம்

சாலை மேம்பாடு மற்றும் நெல் களம் அமைக்கும் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் தொடங்கி வைத்தாா். நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட கோட்டுச்சேரி மேடு வடக்குத் தெரு, நடுத்தெரு ஆகிய பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறையின்... மேலும் பார்க்க

பள்ளி வாகனங்கள் ஜூன் 7, 8-ஆம் தேதிகளில் ஆய்வு

பள்ளி வாகனங்கள் ஜூன் 7 மற்றும் 8-ஆம் தேதியில் ஆய்வு செய்யப்படும் என போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து காரைக்கால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகள் ஆய்வு

காரைக்காலில் தேசிய ஜல் ஜீவன் மிஷன் திட்ட அதிகாரிகள், குடிநீா் விநியோகத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனா். மத்திய ஜல் சக்தி துறையின் கீழ் உள்ள ஜல் சக்தி மிஷன் என்கிற திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குழாய்... மேலும் பார்க்க