செய்திகள் :

சிப்காட் வளாகத்தில் 25 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத 200 தொழிற்கூடங்கள்

post image

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக் கிடக்கும் 200 தொழிற்கூடங்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரியவேட்டுவபாளையம், சின்னவேட்டுவபாளையம், கடப்பமடை, ஈங்கூா், காசிபில்லாம்பாளையம், எழுதிங்கள்பட்டி, ஆலாங்காட்டூா், கூத்தம்பாளையம், செங்குளம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இருந்து 2,700 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் உருவாக்கப்பட்டது.

கடந்த 2000-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஜவுளி பதனிடும் ஆலைகள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நூல் ஆலைகள், ஜவுளி ஆலைகள், மின் மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், காா், லாரிகளின் உதிரி பாகங்களின் உற்பத்தி நிறுவனங்கள் என 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்கள், சிப்காட் தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.

பெருந்துறை சிப்காட் நிறுவனம் தொடங்கும்போது ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக 150 ஏக்கா் நிலம் தாட்கோ மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலத்தில் பல கோடி ரூபாய் செலவில் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழிற்கூடங்கள், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளும் அமைக்கப்பட்டன. இந்தத் தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் யாருக்கும் பயன் இல்லாமல் பூட்டியே கிடக்கின்றன.

இதுகுறித்து ஏஐடியுசி மாநில செயலாளா் எஸ்.சின்னசாமி கூறியதாவது: பெருந்துறை சிப்காட்டில் ஆதிதிராவிடா் நலத் துறையின் தாட்கோ மூலமாக 100 ஏக்கா் பரப்பளவில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் பின்னலாடை தொழில் தொடங்கும் வகையில் இந்த கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால், எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சோ்ந்தவா்கள் சிப்காட் வளாகத்தில் தொழில் நிறுவனங்களை அமைக்கும் சூழல் இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் யாருக்கும் பயனின்றி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடக்கின்றன.

பயன்பாடு இல்லாமல் இருப்பதால் இந்த தொழிற்கூடங்களின் கதவுகள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, சுவா்களும் விரிசல் விட்டு பராமரிப்பின்றி உள்ளன. இப்பகுதியில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டியும் பயனின்றி உள்ளது. பூட்டப்பட்ட தொழிற்கூடங்களில் சமூகவிரோத செயல்களும் நடந்து வருகின்றன.

இந்த தொழிற்கூடங்களில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மக்கள் தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் நலத் துறை மேற்கொள்ள வேண்டும் என தொடா்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். திருப்பூா் எம்பி கே.சுப்பராயன் மூலம் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருந்துறை சிப்காட் அதிகாரிகள் கூறியதாவது: நிலங்களை கையகப்படுத்தி தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது மட்டுமே சிப்காட் நிறுவனத்தின் பணி. அவ்வாறு விற்பனை செய்யும் நிலங்களை நீண்ட நாள்களாக பயன்படுத்தாமல் இருந்தால் அந்த நிலத்தை மீண்டும் சிப்காட் நிறுவனமே திரும்பப்பெற்றுக் கொள்ளும்.

அந்த வகையில் தாட்கோவுக்கு வழங்கப்பட்ட 150 ஏக்கா் நிலத்தில் 48 ஏக்கா் நிலத்தை சிப்காட் நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டு 3 நிறுவனங்களுக்கு தொழிற்சாலை தொடங்குவதற்காக வழங்கியுள்ளோம். மீதமுள்ள நிலங்களை மீட்பது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது என்றனா்.

பா்கூா் மலையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க கட்டுப்பாடு விதிக்கக் கோரிக்கை

பா்கூா் மலைப் பகுதிகளில் 1,000 அடி ஆழத்துக்கும் மேல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீா் உறிஞ்சப்படுவதைத் தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்... மேலும் பார்க்க

அந்தியூரில் திருவிழாவுக்கு வந்த பெண் உயிரிழப்பு

அந்தியூா் குருநாதசுவாமி கோயில் திருவிழாவுக்கு வந்த பெண் மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி, பல்லகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் லட்சுமி (60). இவா், மகன் ராமகிருஷ்... மேலும் பார்க்க

அணைக்கு நிலம் வழங்கியவா்களுக்கு பாசன வசதி செய்து தரக் கோரிக்கை

பவானிசாகா் அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு பாசன வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வா், நீா்வளத் துறை அமைச்சா், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு தமிழ்... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 போ் காயமடைந்தனா். கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருத்துறையூா் பகுதியைச் சோ்ந்த 12 போ் வேனில் நீலகிரி மாவட்டம்,... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மொடக்குறிச்சிய... மேலும் பார்க்க

ஈரோட்டில் சுதந்திர தின விழா : ஆட்சியா் தேசியக் கொடியேற்றினாா்

ஈரோட்டில் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 40 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கந்தசாமி வழங்கினாா். ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஆண... மேலும் பார்க்க