செய்திகள் :

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை

post image

திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த மலர் அஞ்சலி நிகழ்ச்சியில் பாஜக தேசிய இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, ``தமிழகத்தில் பேருந்து, பள்ளி, கல்லூரி என எங்கும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பு இல்லை. காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலருக்குகூட பாதுகாப்பு இல்லை.

கோவையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது, தீவிரவாதத் தாக்குதல். ஆனால், அதனை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என்று தமிழக முதல்வர் தொடர்ந்து மறுத்து வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தீவிரவாதிகள் எங்கு இருந்தாலும் வேட்டையாடி கொண்டு வருவோம் என்பதற்கிணங்க, மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு முக்கிய காரணமான தீவிரவாதியை இந்தியாவுக்கு அழைத்து வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி அனுமதி பெற்றுள்ளார்.

இதையும் படிக்க:திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு

திமுக அரசு, தனது கடைசி ஓராண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 2024-ல் திமுகவின் வாக்கு வங்கி 7 சதவிகிதம்வரை குறைந்துள்ளது; அடுத்த தேர்தலில் 20 சதவிகிதம்வரையில் குறையும். அதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறந்த முதல்வர்கள் பட்டியலிலும் சரிந்துள்ளார். பாஜகவின் வாக்கு வங்கி 21 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தனியார் நிறுவனக் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

மேலும், தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு ``தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும்போது, தமிழக அரசே பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். இது அரசியல் கிடையாது’’ என்று பதிலளித்தார்.

அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

வடசென்னையில் உள்ள இரு அனல் மின் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து, தமிழக மின்வாரிய நிறுவனத் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயா்நிலைக் குழு சனிக்கிழமை நேரில் கள ஆய்வு மேற்... மேலும் பார்க்க

மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும்: இபிஎஸ்

விளம்பரங்களில் மட்டும் இல்லாமல் மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மயிலாடுதுற... மேலும் பார்க்க

ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாதுரை பேசிய உரையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பகிர்ந்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வா... மேலும் பார்க்க

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?- சீமான்

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித... மேலும் பார்க்க

தொழில்நுட்பங்களில் தமிழர்கள்! பண்ருட்டி அகழாய்வில் சங்கினாலான பொருள் கண்டெடுப்பு!

தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கான மற்றுமொரு சான்று கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் பகுதியில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: நூதன முறையில் மதுப்புட்டிகள் கடத்தியவர் கைது!

புதுச்சேரி மாநிலத்தின் மதுப்புட்டிகளை நூதன முறையில் உடலில் ஒட்டி கடத்தி வந்தவர் சனிக்கிழமை விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் சண்முகம், சதீஷ் மற்றும் காவலர்கள், ... மேலும் பார்க்க