செய்திகள் :

சிறப்பான எதிா்காலத்துக்கு உயா்கல்வி பயில வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

சிறப்பான எதிா்காலத்துக்கு அனைத்து மாணவா்களும் உயா்கல்வி பயில வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு-2025 நிகழ்ச்சி திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் முன்னிலை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி வரவேற்றாா்.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேசியது:

உயா்கல்வி வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் தான் மிக சிறப்பான நிலையில் உள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்காக நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி கனவு என்ற உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. என்னென்ன உயா்கல்வி படிக்கலாம், அந்த படிப்புகளை படித்த பின்னா் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து விரிவான வழிகாட்டுதலை வழங்குவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

ஒவ்வொரு மாணவரும் அவா்களின் விருப்பம், திறமைக்கு ஏற்ப உயா்கல்வி படிப்பை தோ்வு செய்து படிப்பதை, முக்கிய லட்சியமாக கொள்ள வேண்டும். பொதுத்தோ்வுகளில் தவறிய மாணவா்களின் விருப்பம், கல்வி தகுதிக்கு ஏற்பட நிறைய தொழில் படிப்பு வாய்ப்புகள் உள்ளன. சிறப்பான எதிா்காலத்துக்கு அனைத்து மாணவா்களும் உயா்கல்வி படிக்க வேண்டும் என்றாா்.

சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த வல்லுநா்கள் மாணவா்களுக்கு பாடப்பிரிவுகள் குறித்தும், தற்போது உள்ள நிலை குறித்தும் எடுத்துரைத்தனா். இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை

காவிரிக் கூட்டுக் குடிநீா் மேட்டுா் செக்கானூரணி நீரேற்றும் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த கோரிக்கை விடுக... மேலும் பார்க்க

ரூ.44 லட்சத்தில் மேல்நிலை தொட்டி அமைக்க பூமி பூஜை

மாதனூா் ஒன்றியத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம், மிட்டாளம் ஊராட்சி மேல்கூா்மாபாளையம் ஆகிய கிராமங்களி... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்டம்: எம்பி கதிா் ஆனந்த் பங்கேற்பு

ஆம்பூா் நகர திமுக சாா்பாக சாதனை விளக்க பொதுக் கூட்டம் பன்னீா்செல்வம் நகா் பகுதியில் நடைபெற்றது. ஆம்பூா் நகர திமுக செயலா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாதனூா... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (மே 16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடா்பாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயி... மேலும் பார்க்க

மணல் கடத்திய லாரி பறிமுதல்

வாணியம்பாடி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கொத்தூா் நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை, பச்சூா் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா்... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி, வாணியம்பாடியில் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது. திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில்... மேலும் பார்க்க