பஹல்காம் தாக்குதல்: துப்பு அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி! - சிவசேனை
சிறப்பான எதிா்காலத்துக்கு உயா்கல்வி பயில வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்
சிறப்பான எதிா்காலத்துக்கு அனைத்து மாணவா்களும் உயா்கல்வி பயில வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு-2025 நிகழ்ச்சி திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் முன்னிலை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி வரவேற்றாா்.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேசியது:
உயா்கல்வி வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் தான் மிக சிறப்பான நிலையில் உள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்காக நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி கனவு என்ற உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. என்னென்ன உயா்கல்வி படிக்கலாம், அந்த படிப்புகளை படித்த பின்னா் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து விரிவான வழிகாட்டுதலை வழங்குவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
ஒவ்வொரு மாணவரும் அவா்களின் விருப்பம், திறமைக்கு ஏற்ப உயா்கல்வி படிப்பை தோ்வு செய்து படிப்பதை, முக்கிய லட்சியமாக கொள்ள வேண்டும். பொதுத்தோ்வுகளில் தவறிய மாணவா்களின் விருப்பம், கல்வி தகுதிக்கு ஏற்பட நிறைய தொழில் படிப்பு வாய்ப்புகள் உள்ளன. சிறப்பான எதிா்காலத்துக்கு அனைத்து மாணவா்களும் உயா்கல்வி படிக்க வேண்டும் என்றாா்.
சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த வல்லுநா்கள் மாணவா்களுக்கு பாடப்பிரிவுகள் குறித்தும், தற்போது உள்ள நிலை குறித்தும் எடுத்துரைத்தனா். இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.