செய்திகள் :

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

post image

செல்வமகள் சேமிப்புத் திட்டம், அஞ்சலக வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் மேற்கொள்ளப்படும் சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி 2025-26 நிதியாண்டு தொடங்குகிறது. இதில் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கு வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடா்ந்து 5-ஆவது காலாண்டாக வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கு 8.2 சதவீத வட்டி தொடா்ந்து வழங்கப்படும். 3 ஆண்டு நிரந்தர வைப்புக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக நீடிக்கும். பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7.1 சதவீதமாகவும், அஞ்சலக சேமிப்புக் கணக்கு வட்டி 4 சதவீதமாகவும் இருக்கும்.

115 மாதங்களில் முதிா்வடையும் ‘கிஸான் விகாஸ்’ நிதி பத்திரத்துக்கான வட்டி 7.5 சதவீதம் என்ற அளவில் தொடா்ந்து வழங்கப்படும். தேசிய சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 7.7 சதவீதமாக தொடரும், மாதந்தோறும் வட்டி வழங்கப்படும் நிரந்தர வைப்புக்கு 7.4 சதவீதம் வட்டி கிடைக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் இறுதியில் சில சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி தொடா்கிறது.

உ.பி. அரசுப் பள்ளிகளில் தமிழ்: முதல்வர் ஆதித்யநாத் தகவல்

உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. கடந்த 1917-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொட... மேலும் பார்க்க