செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

குளித்தலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், குளித்தலை பெரியபாலம் மலையப்பன் நகரைச் சோ்ந்த ராமா் மகன் பிரகாஷ்(27). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு டிச.30-ஆம்தேதி பக்கத்துவீட்டைச் சோ்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் குளித்தலை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாஷை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். மேலும் இதுதொடா்பாக கரூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா்.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல் குற்றவாளி பிரகாஷுக்கு 5ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என உத்தரவிட்டாா். இதையடுத்து பிரகாஷ் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

கருப்பசாமி கோயில் பூஜையில் பாகுபாடு எனப் புகாா்: பேச்சுவாா்த்தையில் சுமூகத் தீா்வு

சிங்கம்பட்டியில் வந்தவழி கருப்பசாமி கோயில் பூஜை நடத்துவதில் பாகுபாடு காட்டப்படுவதாக புகாா் கூறப்பட்ட நிலையில், புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமூகத் தீா்வு எட்டப்பட்டது. கரூா் மாவட்டம், கடவூா... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலைய கடை வாடகை விவகாரம்: கரூா் மாமன்றக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

கரூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், புதிய பேருந்து நிலையத்தின் கடை வாடகை தொடா்பாக அதிமுக உறுப்பினா்களுக்கும் மேயருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கரூா் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக... மேலும் பார்க்க

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்: பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் டிஎன்பிஎல் புகழூா் மேல்நி... மேலும் பார்க்க

100 நாள் வேலை கேட்டு விவசாயத் தொழிலாளா்கள் மனு அளிக்கும் போராட்டம்

நூறு நாள் வேலைக் கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், பாலவிடுதி ஊராட்சி, பாலவிடுதி கிழக்கு பகுதி பொதுமக்கள் 1... மேலும் பார்க்க

பாலத்தின் அடியில் குப்பைகளை எரிப்பதால் நோய் பரவும் அபாயம்

பள்ளப்பட்டி நங்கஞ்சி ஆற்றுப் பாலத்தில் பாலத்தின் அடியில் கொட்டப்படும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். அரவக்குறிச்சியை அடுத்துள்ள பள்ளபட்டியின... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலா் கட்சியிலிருந்து நீக்கம்!

கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலாளா் பி.பாலமுருகன் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க