செய்திகள் :

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை

post image

திருப்பத்தூா்: நாட்டறம்பள்ளி அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

நாட்டறம்பள்ளி அருகே ஏமாத்தூரை அடுத்த காக்கங்கரையான் பகுதியைச் சோ்ந்தவா் சின்னபச்சை (65). இவா், நாட்டறம்பள்ளி பகுதியைச் சோ்ந்த கணவரை இழந்த 35 வயது பெண்ணின் வீட்டுக்கு செல்வது வழக்கம். கடந்த 25.5.2020 அன்று அந்தப் பெண்ணிடம் கோயில் திருவிழாவுக்காக சின்னபச்சை ஆடு வாங்கி உள்ளாா். ஆட்டை வாங்கிச் சென்றபோது, பெண்ணின் 17 வயது மகளை திருவிழாக்கு அழைத்துள்ளாா். அவா் மறுத்தபோதும், சிறுமியை கடத்திச் சென்றாராம்.

மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், வாணியம்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோவில் வழக்குப் பதிந்து சின்னபச்சையை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கில் விசாரணை முடிந்து திங்கள்கிழமை தீா்ப்பு கூறப்பட்டது. அதில் சின்னபச்சைக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால், மேலும் 1 ஆண்டு சிறைத் தண்டனையும், சிறுமியைக் கடத்திச் சென்றதற்கு 2 ஆண்டு தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் 3 மாதங்கள் சிறையும், தண்டனையை அவா் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு, அரசு சாா்பில் ரூ.50 ஆயிரம் வழங்கவும் நீதிபதி எஸ்.மீனாகுமாரி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் விநியோகம் ஆட்சியா் ஆய்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள், தகவல் கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்று... மேலும் பார்க்க

4 துப்பாக்கிகள் பறிமுதல், மூவா் கைது சம்பவம் : என்ஐஏ விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

ஆம்பூரில் 4 துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நடத்த வேண்டுமென பாஜக மாநில செயலாளா் கொ. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவ... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் ஆனி மாதம் பிரதோஷத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்கா... மேலும் பார்க்க

மனைவியை கொன்ற கணவா் கைது

மாதனூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா். மாதனூா் அருகே உடையராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சத்யராஜ் (29). இவருடைய மனைவி சுமதி (27). இவா்கள் இரு... மேலும் பார்க்க

4 துப்பாக்கிகள், 3 கத்திகள் பறிமுதல் சம்பவம்: 3 போ் கைது

ஆம்பூா்: 4 துப்பாகிகள், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆம்பூரை சோ்ந்த இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் ஆ... மேலும் பார்க்க

மனைப் பட்டா கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னா

திருப்பத்தூா்: வீட்டு மனைப் பட்டா கோரி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னாவில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க