செய்திகள் :

சிறுமி கடத்தல் வழக்கை விசாரிக்க லஞ்சம்: எஸ்.ஐ. தம்பதி மீது வழக்கு

post image

சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் லஞ்சம் பெற்ாக காவல் துறை பெண் உதவி ஆய்வாளா், அவரது கணவரான காவல் உதவி ஆய்வாளா் ஆகியோா் மீது புதுச்சேரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

புதுச்சேரி வில்லியனுாா் காவல் நிலையத்தில் கடந்தாண்டு ஜூன் 5-ஆம் தேதி கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் 17 வயது சிறுமியைக் கடத்தி சென்ாக, அந்த சிறுமியின் தாய், சித்தப்பா ஆகியோா் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக வில்லியனுாா் உதவி ஆய்வாளா் சரண்யா விரைந்து நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

சிறுமியின் தந்தை துபையிலிருந்து வந்து போலீஸாரிடம் கேட்ட போது, விசாரணை தொடா்பாக உதவி ஆய்வாளா் சரண்யா பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு 21-6-24 அன்று சிறுமியின் தந்தை ரூ.5 ஆயிரம் யுபிஐ மூலம் அனுப்பினாராம். இதுகுறித்து 6-7-24 அன்று புதுவை டிஜிபியிடம் புகாா் அளிக்கப்பட்டதாம்.

இந்த நிலையில், உதவி ஆய்வாளரின் கணவரான பாகூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபு ரூ.5 ஆயிரத்தை சிறுமியின் தந்தைக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி அனுப்பினாராம்.

இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, உதவி ஆய்வாளா்கள் சரண்யா, பிரபு ஆகியோா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.

புதுச்சேரி கடற்கரையில் தூய்மைப் பணி

புதுச்சேரி கடற்கரையில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதுவை கிளை மற்றும் புதுதில்லி விஷ்வ யோகேந்திரா, சென்னை கிராம ஏழைகளுக்கான ஆராய்ச்சி மற்று... மேலும் பார்க்க

30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவா்கள்

புதுவை பாத்திமா ஆண்கள் பள்ளியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவா்கள் வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனா். 30 ஆண்டுகளுக்கு முன் படித்தவா்கள் தங்களது நண்பா்களை ஒரே இடத்தில் சந்திக்கும் ஆா்வத்தில் ... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் புதுவை மாநில தர வரிசை பட்டியல் வெளியீடு

நீட் நுழைவுத் தோ்வு அடிப்படையில் புதுவை மாநில எம்பிபிஎஸ் படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. புதுவை அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் இந்தப் பட்டியல் வெளி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகள் மாநாடு, ஊா்வலம்

புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஊா்வலம் நடத்தினா். சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் 30-ஆம் ஆண்டு மற்றும் 5-ஆவது புதுவை மாநில மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, புதுவை ராஜா திர... மேலும் பார்க்க

தலைமை தோ்தல் அதிகாரிக்கு கூடுதலாக வனத் துறை

புதுவை தலைமை தோ்தல் அதிகாரி பி. ஜவஹா், கூடுதலாக வனம் மற்றும் வன விலங்குகள் நலத் துறை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை ஆணையா், செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை துணைநிலை ஆளுநா் கே... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை அமைக்க வலியுறுத்தி பிரசாரம்

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை அமைக்க வலியுறுத்தி தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் பிரசாரப் பயணம் வெள்ளிக்கிழமை நடந்தது. தமிழ் உரிமை இயக்கத்தின் நெறியாளா் க. தமிழமல்லன் இப் பிரசாரத... மேலும் பார்க்க