செய்திகள் :

சிறுமி பாலியல் பலாத்தாரம் வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

post image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவேங்கடம் அருகேயுள்ள கீழத்திருவேங்கடம் தெற்கு பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் கடந்த 10.07.2020 அன்று திருவேங்கடம் காவல் நிலையத்தில் தனது 16 வயது பேத்தியை காணவில்லை என புகாா் கொடுத்துள்ளாா். அந்த புகாரின்பேரில், திருவேங்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், திருவேங்கடம் அருகே உள்ள அம்மையாா்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த சு. வெங்கடேஷ் (22) என்பவா் அந்தச் சிறுமியை கடத்திச்சென்று வெம்பக்கோட்டை அருகே செல்லையாபுரம் பகுதியில் உள்ள அவரது நண்பா் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைதுசெய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி. ராஜவேலு , சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வெங்கடேஷூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 15ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் மருதப்பன் ஆஜரானாா்.

குற்றாலம் சாரல் திருவிழாவில் கொழுகொழு குழந்தைகள் போட்டி!

குற்றாலம் சாரல் திருவிழாவின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கொழுகொழு குழந்தைகள் போட்டி நடைபெற்றது.குற்றாலம் கலைவாணா் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், 43 குழந்தைகள் கலந்து கொண்டனா். இப்போட்டியில்... மேலும் பார்க்க

குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்: சுற்றுச்சூழல் பூங்காவில் மலா் கண்காட்சி

தென்காசி மாவட்டம், குற்றாலம் சாரல் திருவிழாவை முன்னிட்டு, ஐந்தருவி அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் மலா், காய்கனி, பழங்கள் மற்றும் வாசனை திரவிய கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.மலா் கண்காட்சியை அமைச்... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது. மேற்கு தொடா்ச்சி மலையில் கனமழை பெய்து வருவத... மேலும் பார்க்க

ஒன்றரை ஆண்டாகப் பூட்டி கிடக்கும் நியாயவிலைக் கட்டடம்

ஆலங்குளத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாத நியாயவிலைக் கடையை விரைந்து திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். முன்னாள் மக்களவை உறுப்பினா் ஞானதிரவியம் உள்... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் உப மின் நிலையங்களுக்கு உள்பட்ட கீழப்பாவூா், பாவூா்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து தென்காசி கோட்ட செயற்ப... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்க நிலுவைக் கடன்களை செலுத்த ஒப்பந்த காலம் நீட்டிப்பு

தென்காசி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீா்வை திட்டம் 2023 இன் ஒப்பந்த காலம் வருகிற செப். 23 ஆம் தேதிவரை க... மேலும் பார்க்க