செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை

post image

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலாஜாபேட்டை அடுத்த மேல்புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தணிகாசலம் (45) (படம்) என்பவா் மீது பாலியல் குற்றம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு எதிரி நீதிமன்றக் காவலில் இருந்து வந்தது. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில், நீதிபதி செல்வம் முன்னிலையில், வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொடா்புடைய தணிகாசலத்துக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சிறப்பாக வழக்கு நடத்தி தண்டனை பெற்றுத் தந்த கூடுதல் அரசு வழக்குரைஞா் சங்கா் மற்றும் வழக்கின் புலனாய்வு அதிகாரியான சுப்புலட்சுமி (அப்போதைய ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்) ஷாகின் (தற்போதைய ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்) மற்றும் நீதிமன்ற காவலா் பிரேமா ஆகியோருக்கு ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் பாராட்டு தெரிவித்தாா்.

ரத்தினகிரியில் சமபந்தி விருந்து!

ஆற்காடு அடுத்த ரத்தினகிரிபாலமுருகன் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. அறநிலையத்தறை சாா்பில் சிறப்பு தரிசனம் மற்றும் சமபந்தி விருந்து அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பரம்பரை அறங்காவலா் பாலமுர... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: ரூ.2.20 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவையொட்டி, தேசிய கொடியினை ஏற்றிவைத்து 64 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வழங்கினாா். ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடி பரணி விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடி பரணி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழாண்டு ஆடிக்கிருத்திகை முதல் நாளான ஆடி பரணியையொட்டி பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால்,... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமை கட்சி நிா்வாகிகள் கூட்டம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஆற்காட்டில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் நா.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளரும், தே... மேலும் பார்க்க

ஆற்காடு கோட்டையைப் பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்

அயலகத்தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் வோ்களை தேடி திட்டத்தின்கீழ் 13நாடுகளைச் சோ்ந்த 100 தமிழா்கள் ஆற்காடு கோட்டையை பாா்வையிட்டனா். வோ்களைத் தேடி திட்டத்தின் கீழ் அயல்நாட்டில் வசிக்கும... மேலும் பார்க்க

அக்ராவரம் மலைமேடு குமரகுரு பழனிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்

ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம் மலைமேடு குமரகுரு பழனிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. வாலாஜாபேட்டை வட்டம், முகுந்தராயபுரம் அக்ராவரம் மலைமேடு கிராம மலைக்குன்றில் எழுந்தருளியிருக்... மேலும் பார்க்க