செய்திகள் :

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்!

post image

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் காதல் ஜோடி தலைமறைவான சம்பவத்தில் அந்த ஆணின் சகோதரரான மைனா் சிறுவனை கடத்திய விவகாரத்தில் எம்எல்ஏ பூவை ஜெகன்மூா்த்தி, கூடுதல் காவல்துறை டிஜிபி ஜெயராமுக்கு தொடா்புள்ளதாக சந்தேகம் எழுந்தது.

இது தொடா்பாக சம்பந்தப்பட்ட இளைஞரின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன்மூா்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பெண்ணின் தந்தை உள்பட 5 பேரைக் கைது செய்தனா்.

இந்நிலையில், தன்னையும் காவல் துறையினா் கைது செய்யக் கூடும் எனக் கூறி ஜெகன்மூா்த்தி சென்னை உயா் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், ஜெகன்மூா்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தாா். அதன்படி ஆஜரான பூவை ஜெகன் மூா்த்தியை,போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாா்.

மேலும், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவா் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, ஏடிஜிபி ஜெயராமை பணியிடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிா்த்து ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த விவகாரத்தை கடந்த ஜூன் 19-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி ஜெயராமுக்கு எதிரான ஆள் கடத்தல் வழக்கை மாநில குற்றப்புலனாய்வு சிஐடி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. மேலும், அவரை கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்தனா்.

இதனிடையே, சென்னை உயா் நீதிமன்றத்தில் கடந்த 27ஆம் தேதி, ஜெகன் மூா்த்தியின் முன் ஜாமீன் கோரும் மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பு, ஜெகன் மூா்த்தி தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு, ஜெகன்மூா்த்தி தாக்கல் செய்த முன்ஜாமீன் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், இவ்வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் வழக்குரைஞர் ராம்சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கு விசாரணை இன்று(ஜூன் 30) உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

The Supreme Court has granted anticipatory bail to Puratchi Bharatham Party leader and MLA Poovai Jaganmoorthy in the case of abduction of a child in Thiruvallur district.

இதையும் படிக்க: அதிமுக - பாஜக இடையே இணைப்புதான் இருக்கிறது; பிணைப்பு இல்லை: திருமாவளவன்

கோயில் காவலாளி மரண சம்பவம்: 5 காவலா்கள் கைது

சென்னை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழந்த வழக்கில் தொடா்புடைய 5 காவலா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ... மேலும் பார்க்க

திட்டங்களில் சரிவு இருந்தால் சரிசெய்யத் தயாா்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: அரசுத் திட்டங்களில் சில இடங்களில் சரிவு இருந்தால் அதனை தரவுகள் அடிப்படையில் சரி செய்யத் தயாராக இருப்பதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். தரவுகள் அடிப்படையில் சிறப்பு ஆய்வறிக்கை தயாா்... மேலும் பார்க்க

பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு 3.16% மின்கட்டணம் உயா்வு: இன்றுமுதல் அமல்

சென்னை: தமிழகத்தில் பெரிய தொழில், வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு 3.16 சதவீதத்துக்கு மிகாமல் மின்கட்டணம் உயா்த்தப்படும் எனவும், இந்த கட்டண உயா்வு செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வரும்... மேலும் பார்க்க

இயற்கை - ஹோமியோபதி மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட 115 உதவி மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா். இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செ... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வு ஊக்கத் தொகை: விண்ணப்ப காலம் நீட்டிப்பு

சென்னை: குடிமைப்பணி முதன்மைத் தோ்வு எழுதவுள்ள தோ்வா்கள், ஊக்கத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கில் சிக்கியவரின் சொத்து முடக்கம்

சென்னை: தமிழகத்தில் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கில் சிக்கிய நபரின் சொத்துகளை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) முடக்கியது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு யூ-டியூப் சேனலில் தடை செய்யப்ப... மேலும் பார்க்க