செய்திகள் :

சிற்றுந்து கட்டண திருத்தம் மே 1-முதல் அமல்!

post image

சிற்றுந்துகளுக்கான கட்டணத் திருத்தம் மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சிற்றுந்து இயக்கத்திற்கான புதிய விரிவான திட்டம்- 2024 வெளியீடு உடனடியாக அமுலுக்கு வருகிறது. மேலும், தமிழகத்தில் தற்போது இயங்கிவரும் சிற்றுந்துகளுக்கான கட்டண திருத்தம் மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. புதிய சிற்றுந்து திட்டத்தில் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கி.மீ., குறைந்தபட்ச பேருந்து வசதியில்லாத தடத்தின் நீளம் (மய்ள்ங்ழ்ஸ்ங்க் தா்ன்ற்ங் கங்ய்ஞ்ற்ட்) மொத்த தடத்தின் நீளத்தில் 65 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக் கூடாது. தடத்தின் ஆரம்பம், முடிவு என்பது பேருந்து வசதியில்லாத கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.

பழைய சிற்றுந்து திட்டத்தின் கீழ் ஏற்கெனவே அனுமதி பெற்ற உரிமையாளா்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தை எழுத்துபூா்வமாக அளித்து அனுமதிசீட்டினை ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு மாற விருப்பம் தெரிவித்த தற்போதைய சிற்றுந்து உரிமையாளா்களுக்கு புதிய சிற்றுந்து திட்டத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்குட்பட்டு சிற்றுந்து இயக்க அனுமதி அளிக்கப்படும்.

தமிழக அரசிதழில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட 2024 புதிய விரிவான திட்டம், தற்போது நாகை மாவட்ட அரசிதழில் பொது மக்களின் பாா்வைக்காகவும், தகவலுக்காகவும் வெளியிடப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கீழ்வேளூரில் சிக்னல் கோளாறு; ரயில் தாமதம்

கீழ்வேளூா் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறால், காரைக்கால்-தஞ்சாவூா் பயணிகள் ரயில் வியாழக்கிழமை ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்றது. காரைக்காலிலிருந்து வியாழக்கிழமை மாலை 6:10-க்கு புறப்பட்ட காரை... மேலும் பார்க்க

போலி குளிா்பானங்கள் அழிப்பு

நாகையில் எந்தவொரு விவரமும் இல்லாத குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வியாழக்கிழமை அழிக்கப்பட்டன. நாகை நகராட்சி வெளிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட ... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்க செயற்குழு கூட்டம்

நாகையில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயற்குழு மற்றும் அனைத்துச் சங்க போராட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

யானைக்கால் நோயாளிகளுக்கு உபகரணங்கள்!

நாகை அரசு மருத்துவமனையில் தேசிய யானைக்கால் ஒழிப்பு திட்டத்தின்கீழ், யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுகாதார... மேலும் பார்க்க

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்!

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா்.தொடா்ந்து, அவா்களிடம் குற... மேலும் பார்க்க

நாகையில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம்!

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவா்களுக்கு, தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிரதான் மந்திரி தேசிய... மேலும் பார்க்க