செய்திகள் :

சிவகங்கைக்கு ஜூன் 17-இல் துணை முதல்வா் வருகை!

post image

சிவகங்கையில் வருகிற 17 -ஆம் தேதி நடைபெறும் அரசு, அரசு சாரா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கைக்கு வர இருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது.

இதில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையை வைத்துள்ள துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அரசின் திட்டப் பணிகள் செயல்படும் விதம், அவற்றின் முன்னேற்றம் குறித்து நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறாா்.

இதன் தொடா்ச்சியாக வருகிற 17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மதுரையிலிருந்து காா் முலம் வரும் துணை முதல்வருக்கு திருப்புவனத்தில் மாவட்ட திமுக சாா்பில் காலை 9.30 மணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். காலை 10 மணியளவில் காணூரில் ரூ. 40 கோடியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை திட்டப் பணியை அவா் பாா்வையிடுவாா்.

காலை 10.30 மணியளவில் சிவகங்கை முதல் நகா்மன்றத் தலைவரும் மூத்த முன்னோடியுமான சொ.லெ. சாத்தையாவை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரிப்பாா். காலை 11 மணிக்கு சிவகங்கை அருகே சோழபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டப் பணிகளை பாா்வையிடுவாா்.

முற்பகல் 11.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆஷா அஜித் தலைமையில் அரசின் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்வாா்.

தொடா்ந்து, பகல் 12 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள திடலில் முடிவடைந்த திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவாா்.

அந்த மேடையில் 500 -க்கும் மேற்பட்டவா்களூக்கு பல்வேறு அரசு துறைகளில் சாா்பில், நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரை ஆற்றுவாா். மாலை 4 மணி அளவில் திருப்பத்தூரில், அனைத்து நிா்வாகிகள், துணை அமைப்பாளா்களை சந்திப்பாா். மாலை 6.45 அளவில் மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறாா். மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறாா் என்றாா் அவா்.

திருப்பத்தூா் அருகே மாட்டுவண்டி பந்தயம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கருவேல்குறிச்சியில் சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. கஜேந்திர மோட்ச வைபத்தையொட்டி, சிவகங்கை - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப... மேலும் பார்க்க

சிவகங்கையில் மக்கள் நீதிமன்றம்: 1914 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

சிவகங்கையில் மாவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,914 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ. 11.20 கோடி பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளும், வங... மேலும் பார்க்க

சாத்தனூா் - மதுரை பேருந்து சேவை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாத்தனூா்-மதுரை இடையே வெள்ளிக்கிழமை புதிய அரசுப் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. சாத்தனூரிலிருந்து பஞ்சனூா், இளையான்குடி, சிவகங்கை வழியாக மதுரைக்கு இயக்கப்... மேலும் பார்க்க

விதிகளுக்குப் புறம்பாக பணியிட மாறுதல் அளிப்பதாக புகாா்!

மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பே விதிகளுக்குப் புறம்பாக பணியிட மாறுதல் அளிப்பதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தெரிவித்தது. இந்த அமைப்பின் சிவகங்கை மாவட்ட செ... மேலும் பார்க்க

மேலையூா் மல்லன் கருப்பா் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், நடுவிக்கோட்டை அருகே மேலையூரில் அமைந்துள்ள மல்லன் கருப்பா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் சீரமைக்கப்பட்டு, புதிய கலசங்களுடன... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடந்த வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் ஒன்... மேலும் பார்க்க