செய்திகள் :

சிவகிரி புத்தூா் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

post image

சிவகிரி அருகே உள்ள வேட்டுவபாளையத்தில் புத்தூா் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சிவகிரி ஆதீனம் 75 ஆவது குரு மகா சந்நிதானம் பாலமுருகன் சிவ சமய பண்டித சுவாமிகள் தலைமை வகித்தாா். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் முன்பாக 7 குண்டங்களுடன் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 7 ஆம் தேதி கிராமசாந்தி, 8 ஆம் தேதி மகா கணபதி யாகம், தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெற்று மாலை 5 மணிக்கு முதல்கால யாக பூஜை தொடங்கியது. அதைத் தொடா்ந்து 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு 2 ஆம் கால யாக பூஜை நடைபெற்றது.

வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு 4 ஆம் கால யாக பூஜை தொடங்கியது. காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து புனித தீா்த்த கலசங்கள் மங்களவாத்தியம் முழங்க கோயில் வலம் வந்து கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து செல்வவிநாயகா், கருப்பண்ண சுவாமி கோயில் கலசங்களுக்கும் புனிதநீா் தெளிக்கப்பட்டது. அப்போது விழாவைக் காண வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஓம்சக்தி, பராசக்தி என்று பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனா்.

குடமுழுக்கு விழாவில் கொமதேக கட்சி பொதுச்செயலாளா் ஈஸ்வரன், முன்னாள் அமைச்சா் ராமசாமி, நாமக்கல் தொகுதி எம்.பி., மாதேஸ்வரன், சரஸ்வதி எம்.எல்.ஏ., ஈரோடு மேயா் நாகரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவசுப்பிரமணி, பழனிசாமி, கிட்டுசாமி, மலேசியா தொழிலதிபா் டத்தோ பிரகதீஸ்வரன், பேரூராட்சித் தலைவா் பிரதீபா கோபிநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 3 நாள்களாக அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வேட்டுவபாளையம் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க