செய்திகள் :

சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

post image

சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கரூரில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின்போது அவர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் பள்ளிகளை திறந்தோம். ஆனால் திமுக ஆட்சியில் 207 பள்ளிகளை மூடிவிட்டார்கள். இவர்களெல்லாம் கல்வியிலே சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்று நிகழ்ச்சி நடத்துகிறார்கள். செந்தில் பாலாஜி எப்படிபட்டவர் என்று இந்த கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

அவர் நடிப்பிலே சிறந்த நடிகர். சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வோரு வேடம் போடுவார். புதுபுது யுக்தியை கையாள்வர். அத்தனையும் கிரிமினல் எண்ணம். கவர்ச்சிகரமாக தேர்தல் நேரத்தில் பேசி வாக்குகளை பெறுகின்றவர். தேர்தலின் போது அவருக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு போலி வெள்ளிக் கொலுசு கொடுத்தவர்.

மெட்ரோவில் வேலை என நம்பி ஏமாற வேண்டாம்

அவருக்கு ஓட்டுபோட்ட மக்களைக்கூட ஏமாற்றியவர். தேர்தல் முடியும் வரை திமுகவில் இருப்பார். ஏற்கெனவே 5 கட்சிக்கு போய்விட்டு வந்துவிட்டார். முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு மீறிய அதிகாரம் கொடுத்து ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜிக்கு அவரே அவரால் காப்பாற்றிக் கொள்ள முடியாது. சுமார் 450 நாள்கள் சிறையில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி.

அப்படிபட்டவரை நம்பி தவறான செயலில் ஈடுபடுபவர்களுக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்தால் அவர்களையும் எவராலும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

AIADMK General Secretary Edappadi Palaniswami has criticized Senthil Balaji, saying that he is a better actor than Sivaji Ganesan.

தனியாா் பள்ளிகள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி வழங்கக் கோரி தனியாா் பள்ளிகள் சங்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிக... மேலும் பார்க்க

தமிழக அரசின் சிற்றுந்து சேவை திட்டத்துக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

தமிழக அரசின் விரிவான சிற்றுந்து சேவை திட்டத்துக்குத் தடை கோரிய வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மற்றும் சில தனிநபா்கள் உள்ளிட்ட 23 போ் சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

முதல்வா் பாதுகாப்புக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 110 கேமராக்கள்

சென்னையில் முதல்வரில் வீடு அமைந்துள்ள பகுதி, வீட்டிலிருந்து சென்றுவரும் வழித் தடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏஐ) 110 கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தமி... மேலும் பார்க்க

தமிழக சுகாதாரத் துறை இந்தியாவுக்கே முன்னோடி அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழக சுகாதாரத் துறை பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கல... மேலும் பார்க்க

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அரசு மேற்கொள்ளாவிட்டால், நீதிமன்றமே அதற்கான ஒப்பந்தத்தை வழங்க நேரிடும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல ம... மேலும் பார்க்க

விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரசாரம்

தவெக தலைவா் விஜய், நாமக்கல் மற்றும் கரூரில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை சனிக்கிழமை (செப்.27) மேற்கொள்கிறாா். வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்... மேலும் பார்க்க