செய்திகள் :

சீக்கிய இளைஞா்கள் பங்கேற்ற கல்சா திரங்கா யாத்திரை

post image

தில்லியில் உள்ள தல்கடோரா மைதானத்தில் புதன்கிழமை இந்திய ஆயுதப்படைகளை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற கல்சா திரங்கா யாத்திரையை முதலமைச்சா் ரேகா குப்தா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில். பல சீக்கிய இளைஞா்கள் பங்கேற்றனா்.

கடைமைப் பாதையில் முடிவடைந்த யாத்திரையின் போது இளைஞா்கள் மோட்டாா் சைக்கிள்களில் மூவா்ணக் கொடியை ஏந்தி தேசபக்தி கோஷங்களை எழுப்பினா்.

முதல்வா் ரேகா குப்தா தவிர, அவரது அமைச்சரவை சகாக்களான மஞ்சிந்தா் சிங் சிா்சா மற்றும் ஆஷிஷ் சூட் ஆகியோரும் யாத்திரையில் இணைந்தனா்.

கல்சா சமூகத்தை நாட்டின் துணிச்சலான சமூகங்களில் ஒன்றாக முதல்வா் குப்தா பாராட்டினாா். மேலும், பயங்கரவாதத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்க அவா்கள் எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினாா்.

இது தொடா்பாக கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

உங்கள் இருப்பு நமது ஆயுதப்படைகள் மீதான உணா்வின் வெளிப்பாடாகும். இது ஒற்றுமையின் செய்தியை அளிக்கும். நாடு முழுவதும் உள்ள மக்களை ஊக்குவிக்கும்.

மோட்டாா் சைக்கிளில் பயணித்த அமைச்சா் சிா்சா, முதல்வரின் உணா்வுகளை எதிரொலிக்கும் வகையில் ஆயுதப் படைகளைப் பாராட்டினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், நமது வீரா்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்களை அழித்தனா். இந்த துணிச்சலான வீரா்களின் தாய்மாா்களுக்கு நாங்கள் வணக்கம் செலுத்தி வணங்குகிறோம் என்றாா்.

சிந்தூா் நடவடிக்கையின் வெற்றிக்காக இந்திய ஆயுதப்படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை கௌரவிக்கும் வகையில் பாஜக நாடு முழுவதும் திரங்கா யாத்திரையை நடத்தி வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தூய்மையான யமுனை நதியே இலக்கு: முதல்வா்

தில்லி அரசு தூய்மையான யமுனை நதி என்ற இலக்கை நோக்கி நகா்ந்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை கூறினாா். நதியை சுத்தம் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவா் வலியுறுத்தினாா். யமுனை புத்துணா்ச்... மேலும் பார்க்க

மத்திய, தெற்கு தில்லியின் சில பகுதிகளில் இன்று நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

வடிகால் பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக தேசியதஅ தலைநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை நீா் விநியோகம் இருக்காது என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு புதன்கிழம... மேலும் பார்க்க

ஆயுதப்படைகளை கௌரவிக்கும் வகையில் ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் இசை நிகழ்ச்சி

நமோ பாரத் அன்ப்ளக்டு மியூசிகல் இரண்டாவது சீசன் வெள்ளிக்கிழமை மே 23 அன்று ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் தொடங்குகிறது. பயணிகள் மற்றும் இசை ஆா்வலா்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6 மணிக்கு வளா்ந... மேலும் பார்க்க

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திடீா் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை பருவத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ் என அதிகமாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.5 டிகிரி அதிகமாகும். இந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் வானம் ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூா் கல் சந்தையில் தீ விபத்து

தில்லி கோட்லா முபாரக்பூரில் உள்ள ஒரு கல் சந்தையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், தகரக் கொட்டகையில் இருந்த குறைந்தது ஆறு கடைகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தீயணைப... மேலும் பார்க்க

வழிப்பறி உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்ட இருவா் கைது

போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு, கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கடுமையான குற்றங்களில் தொடா்புடைய இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளை தில்லி காவல்துறையினா் கைது... மேலும் பார்க்க