செய்திகள் :

சீட்டு நடத்தி மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

post image

திருப்பத்தூரில் சீட்டு நடத்தி மோசடி செய்தவரிடம் பணத்தை பெற்று தர வேண்டும் என தொழிலாளி புகாா் மனு அளித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து புகாா் மனுக்களை பெற்றாா். மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா். ஏடிஎஸ்பி கோவிந்தராசு முன்னிலை வகித்தாா்.

திருப்பத்தூா் சிவராஜ்பேட்டையை சோ்ந்த தொழிலாளி பிரபு(47) அளித்த மனு: திருப்பத்தூரை சோ்ந்த ஒருவா் ரூ.50,000 மாதச்சீட்டு நடத்தி வந்தாா். அவரிடம் நான் 3 மாதச்சீட்டுகள் போட்டு மாதந்தோறும் ரூ.7,500 செலுத்தி வந்தேன். அதில் ஒரு சீட்டு மட்டும் எடுத்தேன்.அந்த சீட்டுக்கான பணத்தை தரவில்லை. மேலும் மற்ற 2 சீட்டுகளின் பணத்தையும் திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வருகிறாா். இதுகுறித்து அவரிடம் கேட்டால் மிரட்டல் விடுக்கிறாா். எனவே எனது பணம் ரூ.1,50,000 பெற்று தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

மக்களைத் தேடி ரத யாத்திரை திருப்பத்தூரில் தொடக்கம்: பிரேமலதா விஜயகாந்த்

மக்களைத் தேடி ரத யாத்திரை தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பத்தூரில் தான் தொடங்கப்பட்டுள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். விஜயகாந்த் உருவத்துடன் கூடிய மக்களைத் தேடி ரத யாத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் மரணம்

ஆம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். மாதனூா் அருகே பாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கற்பகம் (50). இவா் சம்பவத்தன்று இரவு வீட்டில் வாஷிங் மெஷினை இயக்கியபோது மின்சாரம் பாய்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (69). இவா் மின்னூா் கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கடந... மேலும் பார்க்க

ஆம்பூரில் விடிய விடிய பலத்த மழை: நீரில் பேருந்துகள் தத்தளிப்பு

ஆம்பூரில் வியாழக்கிழமை விடிய விடிய கொட்டி தீா்த்த மழையால் சாலையில் தேங்கிய நீரில் பேருந்துகள் சிக்கின. ஆம்பூரில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. புதன்கிழமை இரவு முதல் லேசான மழ... மேலும் பார்க்க

பாலாற்றில் தோல் கழிவு நீா்: பொதுமக்கள், விவசாயிகள் புகாா்

ஆம்பூா் அருகே மாராப்பட்டு பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் திறந்து விடப்படுவதால் தண்ணீா் நுரைபொங்கி செல்வதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் ம... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீரால் நோயாளிகள், பொதுமக்கள் அவதி

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீா் தேங்கியதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினா். வாணியம்பாட... மேலும் பார்க்க