செய்திகள் :

சீனாவால் எழுந்துள்ள சவால்கள்: நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை- காங்கிரஸ்

post image

சீனாவின் எழுச்சியால் இந்தியா எதிா்கொண்டுள்ள முக்கியமான பாதுகாப்பு-பொருளாதார சவால்கள் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்; இதற்கு பிரதமா் மோடி ஒப்புக் கொள்வாா் என நம்புகிறோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

‘கடந்த 1962-ஆம் ஆண்டில் சீன படையெடுப்பின்போது எல்லை நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது; இப்போது அதுபோன்ற விவாதத்தை ஏன் மேற்கொள்ள முடியாது?’ என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 26 பேரை பலிகொண்ட பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகு நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடா் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், உலகின் முன்னணி உற்பத்தியாளா், இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என சீனாவின் எழுச்சியால் எழுந்துள்ள சவால்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை 14-ஆம் தேதி சீன துணை அதிபா் ஹன் ஜேங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘ரஷியாவின் கஸானில் பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு பிறகு இருதரப்பு உறவுகள் சீராக மேம்பட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டாா். ஆனால், உண்மை நிலவரம் வேறு.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு முழு ஆதரவை வழங்கிய சீனா, ஜே-10சி போா் விமானம், பிஎல்-15இ ஏவுகணை, குறிப்பிட்ட வகை ட்ரோன்கள் என தனது ஆயுதங்கள் மற்றும் போா்த் தளவாடங்களை பரிசோதிக்கும் களமாகப் பயன்படுத்தியது.

இந்திய ராணுவ செயல்பாடுகள் தொடா்பாக நிகழ்நேர உளவுத் தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியதாக ராணுவ துணைத் தலைமை தளபதி ராகுல் ஆா்.சிங் சுட்டிக் காட்டியுள்ளாா். சீனாவிடம் இருந்து விரைவில் ஜே-35 வகை போா் விமானங்களை பாகிஸ்தான் கொள்முதல் செய்யவிருக்கிறது.

இந்தியாவுக்கான அரிய வகை புவிக் காந்தங்கள், பிரத்யேக உரங்கள், சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் ஏற்றுமதியை சீனா கட்டுப்படுத்தியுள்ளது. நாட்டில் தொலைதொடா்பு, மருந்து தயாரிப்பு, மின்னணுவியல் போன்ற முக்கியத் துறைகள் சீனாவின் இறக்குமதியையே பெரிதும் நம்பியுள்ளன. இருதரப்பு வா்த்தக பற்றாக்குறை 99.2 பில்லியன் டாலரை எட்டியுள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

எஸ்.ஜெய்சங்கா் மீது ராகுல் விமா்சனம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தையொட்டி, சீன அதிபா் ஷி ஜின்பிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்ததாக வெளியான ஊடக செய்தியை இணைத்து, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

அதில், ‘இந்திய வெளியுறவுக் கொள்கையை அழிக்கும் வகையில், வேடிக்கை வித்தைகளை முழு வீச்சில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறாா் எஸ்.ஜெய்சங்கா். அடுத்து, சீன வெளியுறவு அமைச்சா் இந்தியாவுக்கு வந்து, இருதரப்பு உறவு குறித்து மோடியிடம் விளக்குவாா் என நினைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாஜகவை மிரட்டும் கர்ப்பிணிப் பெண்! யார் இவர்?

மத்தியப் பிரதேசத்தில் தங்கள் கிராமத்தில் சாலை வசதிகோரி புகார் அளித்த பெண், மத்திய அமைச்சரிடமும் முறையீடு செய்வதாக அம்மாநில எம்.பி.க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் சிதி மாவட்டத்தில்... மேலும் பார்க்க

நிமிஷாவுக்கு மன்னிப்புக் கிடையாது! கொல்லப்பட்டவரின் சகோதரர் திட்டவட்டம்!

இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு கிடையாது என்று அவரால் கொலை செய்யப்பட்ட தலால் அப்து மஹதியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.கடந்த 2017 ஆம் ஆண்டு யேமன் நாட்டைச் சோ்ந்த தலால் அப்து மஹதி என்பவரை... மேலும் பார்க்க

உ.பி.: காதல் விவகாரத்தில் கொலை செய்த பரேலி இளைஞருக்கு ஆயுள்!

உத்தரப் பிரதேசத்தின் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் விவகாரத்தில் இளைஞர் கொல்லப்பட்டது சம்பவத்தில் 24 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜம்மன்லால் (22) கொலை செய்ய... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. தாய்நாடு திரும்பும் பிரிட்டன் போர் விமானம்!

திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம் சுமார் ஒருமாத காலத்துக்குப் பின்னர் தாய்நாடு செல்லவுள்ளது.பிரிட்டன் எப்-35 போர் விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததாகக் கூறி, திருவனந்தபுரம் சர்... மேலும் பார்க்க

இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!

இறந்தோரின் ஆதார் அட்டைகளும் செயலாக்கத்தில் இருப்பதால், ஆதார் அட்டை வைத்திருப்போரின் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.ஐ.நா. அவையின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஏப்ரல... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க... மேலும் பார்க்க