செய்திகள் :

சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலக்‌ஷ்மி திட்டவட்டம்

post image

புது தில்லி: சீமான் மீது விஜயலக்‌ஷ்மி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி, சீமான் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 21) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை என்று நடிகை விஜயலக்‌ஷ்மி நீதிமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சீமானுடன் பேசி தீர்வு காண தயாராக இல்லை என்றும் விஜயலக்‌ஷ்மி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசமும் கோரப்பட்டுள்ளது.

இதனிடையே, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலக்‌ஷ்மி அளித்த பாலியல் புகாரில் புலன் விசாரணை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய விஜயலக்‌ஷ்மி தரப்ப்புக்கு 4 வாரம் கால அவகாசமும் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளை வணிகா் சங்க பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்

சென்னை: தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் 42-ஆவது மாநில செயற்குழு கூட்டம் வரும் ஜூலை 23-இல் நடைபெறும் என அந்த அமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கா... மேலும் பார்க்க

2.50 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்பு

சென்னை: தமிழகத்தில் 2.50 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சா... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: ராமேசுவரத்துக்கு நாளை சிறப்பு பேருந்துகள்

சென்னை1: ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னை மற்றும் பிற நகரங்களிலிருந்து ராமேசுவரத்துக்கு புதன்கிழமை (ஜூலை 23) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சாா்பில்... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலைப் பட்டியல் வெளியீடு

சென்னை: அரசுத் துறைகளின் பயன்பாட்டுக்காக, கட்டுமானப் பொருள்களின் விலைப் பட்டியலை பொதுப்பணித் துறை வெளியிட்டது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் பயன்படுத்தும் வகையில், பொதுப்பணித் துறையால் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் 574 கௌரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் கோவி.செழியன்

சென்னை: நிகழ் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். கௌரவ வ... மேலும் பார்க்க

74 விருதுகளுக்கு தமிழறிஞா்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: திருவள்ளுவா் விருது உள்பட 74 விருதுகளுக்கு தமிழறிஞா்கள் செப்.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க