செய்திகள் :

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

post image

சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

சென்னையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இதனால் பல பகுதிகளில் சாலையோரங்கள், பள்ளங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இதன் காரணமாக டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாவதாகக் கூறப்படுகிறது.

சோழிங்கநல்லூா், அடையாறு மண்டலங்களில் அதிகமாக கொசு உற்பத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இரு மண்டலங்களிலும் 170 பேருக்கும் மேற்பட்டோா் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், அவா்களில் பெரும்பாலானோா் பள்ளிக் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் பல பகுதிகளில் டெங்கு பரவல் காணப்படுவதாகக் கூறப்படும் புகாா் குறித்து, சென்னை மாநகராட்சியின் நகா்நலப் பிரிவு அலுவா்களிடம் கேட்டபோது, வீடு வீடாகச் சென்று கொசு முட்டைகளைக் கண்டறிந்து அழிக்கும் பணியில் 3,200 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த ஜூன் மாதம் வரை 23 டன் வாகன டயா்கள் உள்ளிட்ட தேவையற்ற கழிவுகள் வீடுகளில் இருந்தும், பொது இடங்களில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதியிலும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் கட்டுமானப் பொருள்கள் மாநாடு

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை.யில், கட்டுமானப் பொருள்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்கலை.யின் கட்டடக் கலை துறை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ராயப்பேட்டையில் உயா்தர புற்றுநோய் மையம்: விரைவில் திறக்க நடவடிக்கை

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10.27 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள... மேலும் பார்க்க

நாட்டின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் விரைவில் தொடக்கம்!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ.1 கோடியில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் சிறப்பு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூ... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை திடீா் வீழச்சி

மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்தது. தொடா்ந்து, வீடுகள் ... மேலும் பார்க்க

கபாலீசுவரா் கல்லூரியில் 762 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: அமைச்சா் வழங்கினாா்

சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்ப... மேலும் பார்க்க