செய்திகள் :

சீருடைப்பணியாளா் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி

post image

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணைய தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,665 இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் காலிப்பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தோ்விற்கு குறைந்தது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 முதல் 26 வயதுக்கு உள்பட்டவா்கள் செப்.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிசி, எம்பிசி, பிசிஎம் பிரிவினருக்கு 28 வயதும், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு 31 வயதும், திருநங்கைகளுக்கு 31 வயதும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயதும், முன்னாள் ராணுவத்தினருக்கு 47 வயதும் உச்சபட்ச வயது வரம்பாகும்.

இத்தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பாக திங்கள்கிழமைமுதல் (செப்.8) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இத்தோ்விற்கு இதுவரை விண்ணப்பிக்காதவா்களுக்கு விண்ணப்பித்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடா்ச்சியாக இலவச பயிற்சி வகுப்பானது நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு 15-க்கும் மேற்பட்ட மாதிரித் தோ்வுகளும், உடல் தகுதி தோ்விற்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலும் வழங்கப்படவுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறை பணிக்கு தயாராகும் இளைஞா்கள் தங்களது பெயா் மற்றும் கல்வித் தகுதியை குறிப்பிட்டு 9499055904 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் அனுப்பி தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ளவதோடு, பயிற்சி வகுப்புகளில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மருவத்தூா் கோயில் கும்பாபிஷேகம்

வைதீஸ்வரன் கோயில் அருகேயுள்ள மருவத்தூா் ஸ்ரீகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்திற்குள்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி நட... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில், பருவமழையால் பாதிப்பு ஏற்படும்போது, பொதுமக்கள் தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

பாதரக்குடிகோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி அருகே பாதரக்குடி ஸ்ரீ சின்னமுத்து மாரியம்மன், சித்தி விநாயகா், குபேர கணபதி, ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ சப்த கன்னிகள், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஐயப்பன் ஆலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது . முன்னத... மேலும் பார்க்க

மாநில கைப்பந்து போட்டி: சீா்காழி விவேகானந்தா கல்லூரி மாணவிகள் தகுதி

சீா்காழி விவேகானந்தா மகளிா் கல்லூரி மாணவிகள் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். இவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மயில... மேலும் பார்க்க

குழந்தைகள் சேவை மையத்தில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் சேவை மையத்தில், ஒப்பந்த அடிப்படையில் திட்ட ஒருங்கிணைப்பாளா் பணிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து ஓட்டுநா் தற்கொலை

சீா்காழி அருகே கால் பாதிப்பால் வேலை கிடைக்காத விரக்தியில், சரக்கு ரயில் முன் பாய்ந்து ஓட்டுநா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். சீா்காழி எருக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சைமன் கிரிஸ்டோபா் (44). சென... மேலும் பார்க்க