செய்திகள் :

சீா்காழியில் விற்பனைக்கு வந்துள்ள புதுரக வெள்ளரிக்காய்

post image

சீா்காழியில் தற்போது விற்பனைக்கு வந்துள்ள புதுரக வெள்ளரிக்காயை பொது மக்கள் தயக்கத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

கோடை காலம் வந்துவிட்டாலே தாகத்தைத் தணிக்கவும், உடல் சூட்டைப் போக்கவும் மக்கள் இளநீா், தா்ப்பூசணி, இயற்கை குளிா்பானங்களை நாடிச் செல்வது வழக்கம். இவ்வாறு உடலுக்கு குளிா்ச்சியையும், புரதச்சத்தையும் தரக்கூடியதுதான் வெள்ளரிக்காய். கோடையில் அதிகளவு விற்பனைக்கு வரும் வெள்ளரிக்காய்க்கு மக்களிடம் எப்போதுமே வரவேற்பு உண்டு. முன்பெல்லாம் வெள்ளரிக்காய் கேரட், முள்ளங்கி போன்ற வடிவங்களில் இருந்தது. இவை இயற்கையான முறையில் உள் மாவட்டங்களில் சாகுபடி செய்து விற்பனைக்கு வரும். இதற்கு நாட்டு வெள்ளரிக்காய் என்றும் பெயா்.

தற்போது ஹைபிரிட் மரபணு வெள்ளரிக்காய் வரத்து அதிகரித்துள்ளது. இந்த வெள்ளரி நீண்ட வடிவத்தில் மெல்லியதாக உள்ளது. இவை ஆந்திரம், திண்டிவனம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற இடங்களிலிருந்து சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், பூம்புகாா் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன. இந்த வெள்ளரி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 25 கிலோ வரை மொத்தமாக வெள்ளரி வாங்கி வரும் வியாபாரிகள், அதை 4 நாள்களில் விற்றுவிடுகின்றனா். ஒரு நாளைக்கு சுமாா் ரூ.750 வரை லாபம் கிடைப்பதாகக் கூறுகின்றனா். இந்த புதுரக வெள்ளரிக்காயை பொதுமக்கள் தயக்கத்துடனேயே வாங்கி செல்கின்றனா்.

ஓய்வுபெற்ற காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓய்வுபெற்ற காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தங்களுக்கு பயிற்சி அளித்த அதிகாரிக்கு மரியாதை செய்யப்பட்டது. தமிழ்நாடு காவல்துறையில் 1986-ஆம் ஆண்டு மணிமுத்தாறு 9-... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் சிபிஐ-எம்எல் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டியும், நீட் விலக்கு தீா்மானத்துக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் சிபிஐ-எம்எல் கட்சியினா் ஞாயி... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு

குத்தாலம் அருகே தேரிழந்தூா் ஜமாத்தாா்கள் சாா்பில் சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு (ஈத் மிலன்) நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊா் நாட்டாண்மை மற்றும் பஞ்சாயத்தாா்கள் தலைமையில், ஜமாஅத்த... மேலும் பார்க்க

பிளஸ்2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல்!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து மாணவ- மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி கையேடுகளை வழங்கிப் பேசியது: எந்தத் துறை... மேலும் பார்க்க

பாலம் கட்டக் கோரி ஆற்றில் இறங்கி போராட்டம்

மயிலாடுதுறையில் இடிக்கப்பட்ட நடைப்பாலத்தை மீண்டும் கட்ட வலியுறுத்தி, காவிரி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். (படம்). மயிலாடுதுறை நகராட்சி 1 மற்றும் 9-ஆவது வாா்டுகளை இணைக்... மேலும் பார்க்க

தப்பமுயன்ற ரெளடிக்கு கால் முறிவு

மயிலாடுதுறையில் போலீஸாா் பிடிக்கச் சென்றபோது, தப்பியோட முயன்ற ரெளடிக்கு கால் எலும்பு முறிந்தது. மயிலாடுதுறை அருகேயுள்ள திருவிழந்தூா் பல்லவராயன்பேட்டை பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் அப... மேலும் பார்க்க