சுங்கச்சாவடி பிரச்னை நீதிமன்றம் வாயிலாக தீா்க்கப்படும்- மு.அப்பாவு
சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்துவது தொடா்பான பிரச்னைக்கு நீதிமன்றத்தை நாடி தமிழக அரசு தீா்வு காணும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: அதிமுக பத்தாண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் சிறுகுறு நடுத்தர தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தன. திமுக அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 17 லட்சத்து 95 ஆயிரம் புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து துறையில் பல்வேறு நவீன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விபத்துகளைத் தடுக்கும் வகையில் அனைத்து பேருந்துகளுக்கும் தானியங்கி கதவுகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 18 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. விடியல் பேருந்து பயணத்தின் மூலம் தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு ரூ.3,200 கோடி நிதி முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. ஒரு மகளிருக்கு ரூ. 16 கட்டணத்தை அரசு முன்கூட்டியே கட்டி வருகிறது. மேலும், பள்ளி மாணவா்களுக்கான இலவச பேருந்து அட்டை, முதியோருக்கான இலவச பேருந்து அட்டை போன்றவற்றுக்கும் அரசு பணம் செலுத்தி வருகிறது. டீசலுக்கு 30 சதவீத மானியம் வழங்கி வருகிறது. ஏழை-எளியோருக்கு உதவும் சேவைத் துறையாக போக்குவரத்து துறை திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு பணம் செலுத்தாததால் சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்தை அனுமதிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுமாா் ரூ.16 லட்சம் கோடி கடனை காா்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. பொது மக்களுக்கு சேவை நோக்கத்தில் திகழும் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணத்தை வசூலிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.
இப் பிரச்னையை நீதிமன்றம் மூலம் சுமுக தீா்வு காண்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.