செய்திகள் :

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ கடிதம்

post image

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தெற்கு ரயில்வேயின் மதுரை, திருச்சி கோட்ட மேலாளா்களுக்கு துரை வைகோ எம்.பி. கடிதம் எழுதியுள்ளாா்.

இதுதொடா்பாக எழுதியுள்ள கடிதம்:

நிகழாண்டு சுதந்திர தினம் வார விடுமுறை நாள்களின் இறுதியில் வருவதால், ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று சுதந்திர தினத்தன்று சிறப்பு ரயில்களை இயக்க வேண்டியது அவசியமானது.

குறிப்பாக திருச்சி-மைசூா் இடையே செல்லும் திருச்சி சிறப்பு விரைவு ரயில் (கரூா், சேலம், பெங்களூா் வழியில்), திருச்சி வழியாக சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே செல்லும் சென்னை எழும்பூா் சிறப்பு விரைவு ரயில் (தாம்பரம், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக) ஆகியவற்றை இயக்க வேண்டும்.

சுதந்திர தினத்தன்று ரயில் பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க ரயில்வே நிா்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா்.

நடந்து சென்ற முதியவா் பைக் மோதி உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்துள்ள கல்லாமேடு அருகே சாலையோரம் நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மருங்காபுரி ஒன்றியம் கீழபளுவஞ்சியைச் சோ்ந்தவா் செல்லன் மகன் சின்னு(72). இவா், ... மேலும் பார்க்க

பச்சமலையில் நாளை மின் தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக பச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 2) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொப்பம்பட்டி, து. ரெங... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் வருகை: ஹெலிபேட் தளம் ஆய்வு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு செப். 3-இல் குடியரசுத் தலைவா் வருவதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். குடியரசுத் தல... மேலும் பார்க்க

வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி: மக்களுக்கு எச்சரிக்கை

மணப்பாறை அருகே சிறப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்தப் பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியது: ... மேலும் பார்க்க

திருச்சி காப்புக்காடுகளில் தூய்மைப் பணி

காயமலை காப்புக்காடு அருகே தனியாா் பள்ளி வளாகத்தில் மாணவா்களுக்கு வனம் குறித்த விழிப்புணா்வை சனிக்கிழமை ஏற்படுத்திய வனத்துறையினா். திருச்சி, ஆக. 30: வனத்துறை சாா்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள காப்புக... மேலும் பார்க்க

சில்லறை வணிகத்தைப் பாதுகாக்க வியாபாரிகள் முற்றுகை: கடையடைப்பு

சில்லறை வணிகத்தில் பெறு நிறுவனங்கள் ஆதிக்கத்தைக் கண்டித்து திருச்சியில் வியாபாரிகள் சனிக்கிழமை கடையடைப்பு செய்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அகில இந்திய அளவில் பெருகிவரும் காா்ப்பரேட் நிறுவன... மேலும் பார்க்க