செய்திகள் :

சுதந்திர நாள் விடுமுறை: கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

post image

சுதந்திர நாளையொட்டி தொடர் விடுமுறை வருவதால், வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

ஆக. 15 முதல் சுதந்திர நாள் மற்றும் அதற்கு அடுத்த இரு நாள்களும் வார இறுதி நாள் என்பதால், 17ஆம் தேதி வரை விடுமுறை நாள்களாக உள்ளதால், தினசரி பேருந்துகளுடன் சேர்த்து கூடுதல் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆக. 14 ஆம் தேதி (வியாழக்கிழமை) 100 பேருந்துகளும் ஆக. 15 ஆம் தேதி வெள்ளிக் கிழமை 90 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

மாதாவரத்திலிருந்து ஆக. 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களுக்கு 24 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலிருத்தும் ஆக. 17 (ஞாயிற்றுக்கிழமை) 715 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு தவெக துணை நிற்கும்!

Independence Day holiday: Additional buses operating

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். திருச்சி டிஐஜி பதவி வகித்த வருண்குமார் சிபிசிஐடி டிஐஜி பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.சிவில் டிஃபென்ஸ் ஹோம்கார்ட்ஸ் டிஜிபியாக பிரமோத்கும... மேலும் பார்க்க

முதல்வர் மு. க. ஸ்டாலின் - மகாராஷ்டிர ஆளுநர் சந்திப்பு!

சென்னை: தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் மகாராஷ்டிர ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்தார். சென்னையில் முதல்வரை முகாம் அலுவலகத்தில் இன்று(ஆக. 11) சந்தித்து சி. பி. ராதாகிருஷ்ணன் பேசினார். அரச... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு தவெக துணை நிற்கும்!

சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணிகள் தனியாருக்கு தாரை வார்த்து, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.கரோனா போன்ற ... மேலும் பார்க்க

மதுரை தவெக மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி!

மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல் துறை பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தைக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்

கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி கோரியிருந்த நிலையில்... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: கராத்தே பயிற்சியாளர் குற்றவாளி எனத் தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடந்தவர் கெபிராஜ். இவர் தனியார் பள்ளியில் பணி... மேலும் பார்க்க