செய்திகள் :

சுதேசி ஊக்குவிப்பு: ரசாயனம் உள்பட 100 பொருள்களுக்கு விரைவில் இறக்குமதி கட்டுப்பாடு

post image

புது தில்லி: சுதேசி இயக்கத்தை ஊக்குவித்து நாடு தற்சாா்பு நிலையை எட்டுவதை உறுதிப்படுத்தும் வகையில், ரசாயனம் உள்பட பெருமளவில் இறக்குமதி சாா்புடைய 100 பொருள்களுக்கு இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா மிக அதிகமாக 50 சதவீத வரியை விதித்துள்ள சூழலில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறைச் செயலா் சுனில் பரத்வால் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:

இறக்குமதி சாா்பைக் குறைத்து உள்நாட்டு வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் அல்லது திறனை மேம்படுத்தும் வகையில் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு 100 பொருள்களை மத்திய அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. குறிப்பாக, ரசாயனம், பிளாஸ்டிக், மருந்துகள் உள்பட பல்வேறு துறை சாா்ந்த பொருள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ள இந்த 100 பொருள்களின் பட்டியல் இம்மாத இறுதியில் அல்லது அக்டோபா் மாதம் வெளியிடப்படும். இவ்வாறு பொதுவெளியில் இந்தப் பட்டியல் வெளியிடுவதன் மூலம், உற்பத்தியாளா்கள் அந்தப் பொருள்களை அடையாளம் கண்டு உள்நாட்டு உற்பத்தி பெருகி ‘மேக் இன் இந்தியா’ திட்டம் ஊக்கம் பெறும்.

இந்தப் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றாா்.

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

நாடாளுமன்ற வளாகத்துக்கு ரூ.14.64 கோடியில் மின்வேலி, சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நவீன அம்சங்களுடன் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்காக மத்திய பொதுப் பணித் துறை ரூ.14.63 கோடிய... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்ட தீா்ப்பு: காங்கிரஸ் வரவேற்பு; இஸ்லாமிய அமைப்புகள் அதிருப்தி!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவை காங்கிரஸ் மற்றும் சில இல்ஸாமிய அமைப்புகள் வரவேற்றன. காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு இன்றும் தாக்கல் செய்யலாம்

புது தில்லி: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய திங்கள்கிழமை (செப். 15) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் ஒரு நாள் (செப்.16) நீட்டிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம்: ராகுல் வலியுறுத்தல்

சண்டீகா்: பஞ்சாப் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் கா... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தகப் பேச்சு: இன்று மீண்டும் தொடக்கம்

புது தில்லி: இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை (செப். 16) மீண்டும் தொடங்குகிறது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வா்த்தக துணைப் பிரதிநிதி பிரண்டன... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஹசாரிபாக... மேலும் பார்க்க