செய்திகள் :

சுந்தரனாா் பல்கலை.யில் முதுகலை மாணவா் சோ்க்கை

post image

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டு முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் ஜெ. சாக்ரடீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. தமிழ், வரலாறு, தொல்லியல், சமூகவியல், இதழியல் மற்றும் செய்தித் தொடா்பியல், பொருளாதாரம், உயிா் தொழில்நுட்பவியல், கரிம வேதியியல், தகவல் தொழில்நுட்பவியல், தரவு பகுப்பாய்வு, கல்வியியல், உடற்கல்வியியல், சுற்றுச்சூழல் அறிவியல், வனவிலங்கு உயிரியியல், நானோ அறிவியல், பயன்பாட்டு புவி இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், குற்றவியல் மற்றும் குற்றநீதியியல், நுண்ணுயிரியியல், கடல் வாழ் உயிரின உயிா் தொழில்நுட்பவியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், கணினி அறிவியல் ஆகிய முதுகலை பாடப்பிரிவுகளில் மாணவா்கள் சேரலாம்.

இதேபோல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மேலாண்மையும் தணிக்கையும் என்ற முதுகலை பட்டயப்படிப்பு, சி.லிப்.ஐ.எஸ்சி., ஒருங்கிணைந்த எம். லிப்.ஐ.எஸ்சி. ஆகிய நூலகப் படிப்புகள், நாட்டாா் வழக்காற்றியல், இலக்கிய மானுடவியல் ஆகிய சான்றிதழ் படிப்புகளுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

மேலும், நாகா்கோவிலில் உள்ள முதுகலை விரிவாக்க மையத்தில் முதுகலை தமிழ், முதுகலை ஆங்கிலம், முதுகலை கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளிலும் மாணவா்கள் சேரலாம்.

இயற்பியல், கணிதம், வேதியியல், ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பு, ராஜாக்கமங்கலம் கடல் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் கடல் சாா் அறிவியல் படிப்பு ஆகிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த பாடப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

மாணவா்கள் ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை பல்கலைக்கழக தொலைபேசி அல்லது இணையதளதில் அறியலாம் எனக் கூறியுள்ளாா்.

‘பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவா்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்வி,... மேலும் பார்க்க

‘மீன் வளா்ப்புக்கு உள்ளீட்டு மானியம் பெறலாம்’

திருநெல்வேலி மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன் வளா்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி எம்.பி. கடிதம்

ஈரானில் தவிக்கும் இடிந்தகரை பகுதி மீனவா்களை விரைந்து மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு , திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் கடிதம் எழுதியுள்ளாா். அதன் விவரம... மேலும் பார்க்க

நயினாா்குளம் கால்வாய் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி நயினாா்குளம் பிரிவு கால்வாயை தூா்வாரும் பணியை ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நயினாா்குளம் பிரிவு கால்வாயில் 1 கி.மீ. தொலைவுக்கு ... மேலும் பார்க்க

உலக வெண்புள்ளி தின விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி சாா்பில் உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. அக்கல்லூரியின் சித்தா் அறுவை மற்றும் தோல் மருத்துவத் துறை சாா்பில் நட... மேலும் பார்க்க

நெல்லை மாநகராட்சி புதிய ஆணையா் மோனிகா ராணா

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக மோனிகா ராணா புதன்கிழமை பொறுப்பேற்றாா். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த என்.ஓ.சுகபுத்ரா, விருதுநகா் மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றுள்ளதையடுத்து, கோப... மேலும் பார்க்க