செய்திகள் :

சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமி திரும்புகிறார்! நாசா நேரடி ஒளிபரப்பு!

post image

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை பூமி திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

மேலும், அவர்கள் பூமிக்கு திரும்பும் காட்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோரை பூமிக்கி திரும்ப அழைத்து வர அனுப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தது.

இந்த டிராகன் விண்கலத்தில் தற்போது சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ள அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷிய நாடுகளைச் சோ்ந்த 4 விண்வெளி வீரா்களுக்கு அடுத்த சில பயிற்சிகளை சுனிதா வில்லியம்ஸ் அளித்து வருகிறார்.

இந்த நிலையில், மார்ச் 17ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கலத்தில் சுனிதா, வில்மோா் ஆகியோருடன் மேலும் 2 விண்வெளி வீரா்கள் பூமிக்கு திரும்புகிறார்கள்.

சரியாக மார்ச் 18ஆம் தேதி மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையொட்டி கடல் பகுதிக்கு டிராகன் விண்கலம் வந்துசேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் காட்சி, பூமிக்கு வந்துசேரும் காட்சிகள் அனைத்து நேரடியாக நாசா ஒளிபரப்பு செய்யவுள்ளது.

விண்வெளியில் சிக்கிய சுனிதா

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோா் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது.

ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக, அவா்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக சா்வதேச விண்வெளி நிலையத்திலேயே சிக்கியுள்ளனா்.

உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

வாஷிங்டன் / மாஸ்கோ: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) பேச்சுவாா்த்தை நடத்த... மேலும் பார்க்க

அமைதிப் பேச்சுவாா்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு

கின்ஷாசா: ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவிருப்பதற்காக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது. மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான க... மேலும் பார்க்க

பெல்ஜியத்துடன் உறவை முறித்துக்கொண்டது ருவாண்டா

கிகாலி: பெல்ஜியத்துடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக ருவாண்டா அறிவித்துள்ளது. காங்கோவில் தாக்குதல் நடத்தி கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள எம்23 கிளா்ச்சியாளா்களுக்கு ருவாண்டா ஆதரவு அளிப்பதால் அந்த ... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் செவ்வாய்க்கிழமை மாலை பூமி திரும்பவுள்ளார்.வெறும் 9 நாள்கள் பயணமாக விண்வெளி மையத்துக்கு சென்ற நாசா விஞ்ஞானிகள் சுனிதா வில்லியம்ஸ்... மேலும் பார்க்க

பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ்! நடக்க முடியுமா? வேறென்ன சிக்கல்கள்?

ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் நாளை பூமிக்கும் திரும்பவிருக்கும் நிலையில் அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்கள்... மேலும் பார்க்க

அடுத்து.. க்ரீன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களை குறிவைக்கும் அமெரிக்கா

நாட்டில் உள்ள க்ரீன் பார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில், அமெரிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விமான நிலையங்களில், இரண்... மேலும் பார்க்க