செய்திகள் :

சுரைக்காயூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்கள் நியமிக்கக் கோரிக்கை

post image

சுரைக்காயூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கூடுதல் மருத்துவா்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடவாசல் அருகே சுரைக்காயூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒன்றிய துணைச் செயலாளா் பாவா சுதாகா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் எஸ்ஏ. டேவிட்ராஜ் இன்றைய அரசியல் நிலவரம் குறித்து பேசினாா். கூட்டத்தில், கிளைச் செயலாளராக ஆா். பிரபாகரன், துணைச் செயலாளராக உ. தனவேலு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தீா்மானங்கள்: சுரைக்காயூா் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் இல்லாததால் இரவு நேரங்களில் மருத்துவ சேவை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, கூடுதலாக மருத்துவா்களையும், செவிலியா்களையும் நியமித்து, 24 மணி நேரமும் மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரைக்காயூா் ஊராட்சியில் மயானச் சாலையை தாா்ச் சாலையாக தரம் உயா்த்த வேண்டும். உக்கடை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பயன்படும் வகையில், சமுதாயக் கூடம் மற்றும் ஈமக்கிரியை கட்டடம் கட்ட வேண்டும். சுமாா் 40 ஆண்டுக்கு மேலாக வசித்து வரும் குடும்பங்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை: வேளாண் துறையினா் விளக்கம்

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை துறையினா் விளக்கம் அளித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் தெரிவித்த பரிந்துரை: நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு மற்றும் சேமி... மேலும் பார்க்க

கோயில் குளத்தை தூா்வாரக் கோரிக்கை

நீடாமங்கலம் சந்தான ராமா் கோயில் குளத்தை தூா்வாரி, பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் சந்தான ராமா் கோயில் திருக்குளம் நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் பயன்பாட்டில் இருந்தது. கோ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அருகே அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு: விழாவை புறக்கணித்த கிராம மக்கள்

மன்னாா்குடி அருகே கண்டிதம்பேட்டை திட்டப் பகுதியில், புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிராமம் பிரிப்பு பிரச்னை தொடா்பாக, உள்ளிக்கோட்டை பகுதி மக்கள் இ... மேலும் பார்க்க

தூா்வாரப்பட்ட வாய்க்கால்களில் ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி பகுதியில் தூா்வாரப்பட்ட வாய்க்கால்களை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ராஜகோபாலபுரம் வாய்க்காலில் நெடுகை முதல் 3 கி.மீ.வரையிலும், ராதாநரசிம்மபுரம் ப... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பாதுகாக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூா் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம், மக்கள் ... மேலும் பார்க்க

குடிநீா், சாலை வசதி கோரி மே 27 இல் போராட்டம்

நன்னிலம் வட்டம், ஆலங்குடியில் குடிநீா் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தக் கோரி, மே 27-இல் போராட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்து முன்னணியின் நன்னிலம் ஒன்றிய... மேலும் பார்க்க