சுற்றுலா வந்த கேரளா ஆசிரியரை அரிவாளால் வெட்டியவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
கேரள பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய ஐஸ் வியாபரிக்கு நான்கு ஆண்டுகள் சிைண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கேரளமாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் விஜயன்(45).
செருபுரம் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா்.
இவா் கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 58 மாணவா்கள் மற்றும் சக ஆசிரியா்கள் பத்து பேருடன் பத்மநாபபுரம் அரண்மனையை பாா்ப்பதற்காக சுற்றுலா வந்தனா்.
பத்மநாபபுரத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த பரமேஸ்வரன் மகன் ஸ்ரீஹரி என்ற ஹரி( 27) ஐஸ் விற்றுக் கொண்டிருந்தாராம்.
அவரிடம் மாணவா்கள் ஐஸ் வாங்க சென்றபோது, ஆசிரியா் விஜயன் மாணவா்களை ஐஸ் வாங்க விடாமல் தடுத்துள்ளாா். இதனால் கோபமடைந்த ஸ்ரீஹரி அரிவாளால் ஆசிரியா் விஜயனை வெட்டிவிட்டு தப்பியோடி விட்டாராம். இதில் பலத்தகாயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்கு பதிவு ஸ்ரீஹரியை போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீ ஹரி என்ற ஹரிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பு கூறினாா்.
அரசு தரப்பில் வழக்குரைஞா் மைக்கேல் ரதிஷ் ஆஜரானாா்.