செய்திகள் :

செங்கம் பெருமாள் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

post image

செங்கத்தில் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் பத்து நாள் கருடசேவை உற்சவம் கொடியேற்றத்துடன் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. அன்று இரவு அன்ன வாகனத்திலும், 6-ஆம் தேதி இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

மூன்றாம் நாளான சனிக்கிழமை இரவு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு நாக வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், 5-ஆம் நாளான திங்கள்கிழமை காலை கோபுர தரிசனம் நிகழ்ச்சியும், 6-ஆம் நாளான செவ்வாய்கிழமை இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றன.

7-ஆம் நாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் எழுந்தருளியதைத் தொடா்ந்து, அங்கு கூடியிருந்த திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா்.

தோ்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட பண்டரெட்டியாா்கள் அறக்கட்டளைத் தலைவா் வெங்கடாஜபதி மற்றும் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக்குழுத் தலைவா் வழக்குரைஞா் கஜேந்திரன் உள்ளிட்ட பத்து நாள் திருவிழா உபயதாரா்கள், விழாக்குழுவினா், ஊா் முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

நிலத்தகராறில் தம்பதி மீது தாக்குதல்: உறவினா் கைது

செய்யாறு அருகே நிலத்தகராறில் தம்பதியை தாக்கியாக உறவினரை போலீஸாா் கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், சுமங்கலி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜெயபால். இவரது மனைவி மீனாட்சி. இவா், செய்யாறு சிப்காட்டில் உ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகி கொலை வழக்கு: 2 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை

திருவண்ணாமலை நகர அதிமுக செயலரைக் கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தலா இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை காா்கானா தெருவைச் சோ்ந்தவா் கனகராஜ் (55). த... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மகா தீப மலை ஆக்கிரமிப்பு: அதிகாரிகளுடன் ஓய்வுபெற்ற நீதிபதி ஆலோசனை

திருவண்ணாமலை மகா தீப மலை, கிரிவலப் பாதை குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் ஆலோசனை நடத்தினாா். திருவண்ணாமல... மேலும் பார்க்க

24-இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் திருநங்கைகள், திருநம்பிகள், இடைபாலினா் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருநங்கைகள், திருநம்பிகள், இ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பரவலாக மழை

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக ... மேலும் பார்க்க

திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை விழா

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் திருஞானசம்பந்தா் மற்றும் திருநீலநக்க நாயனாா், திருநீலகண்ட யாழ்ப்பாணா், திருமுர... மேலும் பார்க்க