டிரம்ப் வரி: பிற பொருள்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் இதன் விலை மட்டும் மாறாத...
செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்
வாரம் மூன்றுமுறை இயக்கப்படும் செங்கோட்டை-தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க தென்னக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பை ரயில் நிலைய பயணிகள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அம்பாசமுத்திரம் ரயில் நிலைய பயணிகள் நலச் சங்க 3 ஆவது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் சரவணன் சக்திவேல் தலைமை வகித்தாா். செயலா் பாலகிருஷ்ணன், பொருளாளா் முத்துப்பாண்டி, ஆலோசகா்கள், உறுப்பினா்கள் ரயில் சினேகம் பாரதிக்கண்ணன், அப்துல் ஹமீது, கைலாசம், மாரியம்மாள், மோகன், கோகுலசங்கா், ஜெனோ, மேட்டூா் மாரிமுத்து, தமிழ்ச்செல்வன், காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்கேற்ப பயணச் சீட்டு முன்பதிவு செய்வதற்கு கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும், திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் வசதிக்காக பாலக்காடு - திருச்செந்தூா் ரயிலை இணைக்கும் வகையில் திருநெல்வேலியிலிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் 56743 திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயிலை மதியம்2 மணிக்கு இயக்க வேண்டும், அம்பாசமுத்திரம், ரயில் நிலையக் கட்டுமான பணிகளை விரைவில் முடித்து பயணிகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும், மின்சார காா்சேவை, தண்ணீா் வழங்கும் இயந்திரம், துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு அளிக்க வேண்டும், வாரம் 3 முறை மட்டுமே இயக்கப்படும் செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயிலை நோ்பாதையில் விருதுநகா், மதுரை, திருச்சி மாா்க்கத்தில் தினசரி ரயிலாக இயக்கவேண்டும்.
தினந்தோறும் காலை இயங்கும் 56736 செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயிலில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு 18 பெட்டிகளுடன் இயக்க வேண்டும். நெல்லை அதிவிரைவு ரயிலை பயணிகளுக்கு பயனளிக்க ஏதுவாக காலை 6.50 மணிக்கு கிளம்பும் திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயிலின் புறப்படும் நேரத்தை 7.10 மணியாக மாற்ற வேண்டும், சிறப்பு ரயிலாக ஒரு நாள் இயங்கிய திருநெல்வேலி-பெங்களூரு- சிவமோகா விரைவு ரயில், 06029 மற்றும் 06030 திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்களை தினசரி சாதாரண ரயிலாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.