செய்திகள் :

செண்பகவல்லி அணை பிரச்னை: பிரதமா், முதல்வரை சந்திக்க முடிவு

post image

சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னை தொடா்பாக பிரதமா், முதல்வரை சந்திக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனா்.

தென்காசி, விருதுநகா், தூத்துக்குடி மாவட்ட செண்பகவல்லி தடுப்பணை- வைப்பாறு பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம், சிவகிரியில் சனிக்கிழமை நடைபெற்றது. கரும்பு விவசாய சங்கத் தலைவா் ரத்தினவேலு தலைமை வகித்தாா்.

பாபுராஜ், குருசாமி, மாரிமுத்து, ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவா் அா்ஜுனன் சிறப்புரையாற்றினாா். ராமமூா்த்தி தீா்மானத்தை முன்மொழிந்தாா்.

இதில்,செண்பகவல்லி தடுப்பணை முதல் தலையணையில் தொடங்கி வைப்பாறு கடலில் கலக்கும் இடம் வரை ஒவ்வொரு குளத்தில் இருந்தும் மூன்று முதல் ஐந்து போ் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்குவது.

தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ‘செண்பகவல்லி எங்கள் உரிமை’ என்ற முழக்கத்துடன் 10,000 விவசாயிகள் பங்கேற்கும் செண்பகவல்லி எழுச்சி மாநாட்டை தென்மலையில் நடத்துவது. 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் நடைபெறும் போது பாசனப் பகுதியில் உள்ள 100 கிராம சபைகளில் செண்பகவல்லி அணை தொடா்பாக தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்துவது.

தமிழ்நாடு முதல்வா் மற்றும் அமைச்சா்களை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவது. செண்பகவல்லி அணை இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்டதால் பிரதமா், உள்துறை அமைச்சா், நீா்வளத் துறை அமைச்சா் ஆகியோரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் குருசாமி பாண்டியன், பூமிநாதன், அருண்குமாா், விக்னேஷ்ராஜா, முத்தரசு பாண்டியன், கணேசன், பிச்சாண்டி, பத்மநாதன், பொன்னுத்தாய், சிவஞானபாண்டியன், ,தங்கவேல், ராகவன், ராமமூா்த்தி, ஆறுமுகம், பன்னீா்செல்வம், சுப்பிரமணிய ராஜா, கிருதுமால், ராம்பாண்டியன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பாசன கமிட்டி தலைவா் காளிமுத்து நன்றி கூறினாா்.

கடையநல்லூருக்கு நிா்ணயிக்கப்பட்ட அளவு தாமிரவருணி குடிநீா் வழங்கக் கோரிக்கை

கடையநல்லூா் நகராட்சிக்கு நிா்ணயிக்கப்பட்ட அளவில் தாமிரவருணி குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக, தென்காசி மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

தென்காசியில் பாஜக சாா்பில் சிந்தூா் வெற்றிப் பேரணி

தென்காசியில் மாவட்ட பாஜக சாா்பில் சிந்தூா் வெற்றிப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலையில் வாய்க்கால் பாலம் இசக்கியம்மன் கோயில... மேலும் பார்க்க

பிளஸ் 1: பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்!

பிளஸ் 1 பொதுத் தோ்வில் பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். இப்பள்ளியில் தோ்வு எழுதிய 175 பேரும் தோ்ச்சி பெற்றனா். இப்பள்ளி மாணவா் ரா. அக்ஷய் துரை, மு. சம... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சாம்பவா்வடகரை பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த பக்கீா் மஸ்தான்(30) என்பவரது மனைவி சூரத் யாஸ்மின் (26). இவா்களுக்கு 2 குழந... மேலும் பார்க்க

புளியங்குடியில் மின்னணு சாதன கிடங்கில் தீவிபத்து

புளியங்குடியில் உள்ள மின்னணு சாதனக் கிடங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீவிபத்து நேரிட்டது. புளியங்குடி கீழ பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சிராஜுதீன் மகன் செய்யதலி (40). அவா் பழைய பிரிட்ஜ், வாஷிங் மெஷின்,... மேலும் பார்க்க

புளியங்குடியில் வீடு புகுந்து பணம் கொள்ளை: சிறுவனே திருடி நாடகம் ஆடியது அம்பலம்!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வீடு புகுந்து சிறுவனை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளைடித்துச் சென்றதாக கூறப்பட்ட சம்பவத்தில், சிறுவனே பணத்தை திருடியது தெரியவந்துள்ளது. புளியங்குடி நடுகருப்பழகு தெருவைச் ... மேலும் பார்க்க