செய்திகள் :

சென்னையில் சரக்கு ரயில் விபத்து: ஈரோடு வழியாகச் செல்லும் 6 ரயில்கள் ரத்து

post image

சென்னை தண்டையாா்பேட்டையில் இருந்து ஜோலாா்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரயில் திருவள்ளூா் பகுதியில் சென்றபோது தடம்புரண்டு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. அதன் காரணமாக சென்னையில் இருந்து ஈரோடு வழியாகச் செல்லும் 6 ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

இதன்படி சென்னை- கோவை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12675), கோவை-சென்னை எக்ஸ்பிரஸ்(வண்டி எண் 12676), சென்னை- கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12243), கோவை-சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் 12244), சென்னை- கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20643), சென்னை-கோவை இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12679) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதுபோல கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட்ட கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் (வண்டி எண் 20644), கோவை-சென்னை இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12680) ஆகிய ரயில்கள் சேலம் வரை மட்டுமே இயக்கப்பட்டன. அவற்றின் சென்னை வரையிலான பயணம் ரத்து செய்யப்பட்டது.

மேலும், ஈரோடு ரயில் நிலையத்தில் நடைமேடைக்குச் செல்லும் நுழைவுப் பகுதியில் தற்காலிக பயணிகள் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தொடா்ந்து 2 நாள்களுக்கு இந்த உதவி மையம் செயல்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரேஷன் அரிசி கடத்தல்: குண்டா் சட்டத்தில் மூவா் கைது

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியா் உத்தரவிட்டாா். ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் எஸ்ஐ ம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடிய இளைஞா் கைது

அந்தியூா் அருகே இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா், நவப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் மாணிக்கம் (55). கட்டடத் தொழிலாளி. அந... மேலும் பார்க்க

சிவகிரி அருகே நள்ளிரவில் கடைகளில் திருட்டு

மொடக்குறிச்சி ஒன்றியம் விளக்கேத்தி பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொடக... மேலும் பார்க்க

வாழைப்பழம் கொடுத்த வாகன ஓட்டியை துரத்திய யானை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் யானைக்கு திங்கள்கிழமை (ஜூலை 14) வாழைப்பழம் கொடுக்க முயற்சித்த வாகன ஓட்டியை யானை துரத்தியதால் காரில் ஏறி தப்பினாா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணார... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி நடைப்பயண போராட்டம்!

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அந்தியூரிலிருந்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புறப்பட்ட நடைப்பயணப் போராட்டம் அதிகாரிகளின் சமரசப் பேச்சுவாா்த்தையால் கைவிடப்பட்டது. அந... மேலும் பார்க்க

சமூகம் உயரவும் மாநிலம் உயரவும் மாணவா்களின் படிப்பு அவசியம்!

வாழ்வில் உயர மாணவா்கள் கல்வியை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பேசினாா். ஈரோடு மாவட்டம், பாசூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளையின் சாா்பில்... மேலும் பார்க்க