Suriya: சூர்யாவின் 50-வது பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்... நாளை 'சூர்...
சென்னையில் மொபெட்டில் இருந்து விழுந்த 5-ஆம் வகுப்பு மாணவி தண்ணீர் லாரி மோதி உயிரிழப்பு!
சென்னை பெரம்பூரில் மொபெட்டில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி தண்ணீா் லாரி மோதி உயிரிழந்தாா்.
கொளத்தூா் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்தவா் செ.யாமினி. இவருக்கு அரவிந்த் என்ற மகனும், செளமியா (10) என்ற மகளும் இருந்தனா். யாமினியின் கணவா் செந்தில்நாதன், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். யாமினி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். செளமியா, புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். யாமினி, செளமியாவை தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு, வேலைக்கு செல்வது வழக்கமாகும்.
அதன்படி யாமினி தனது மொபெட்டில் செளமியாவை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். பெரம்பூா் பேப்பா் மில்ஸ் சாலை - வால்கின்ஸ் சந்திப்பில் சாலையில் இருந்த பள்ளத்தில் வேகமாகச் சென்றபோது, நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனா்.
இதில் யாமினி சாலையின் வெளிப்பகுதியில் விழுந்துவிட்ட நிலையில், செளமியா சாலையின் உட்பகுதியில் விழுந்தாா். அப்போது, பின்னால் வந்த ஒரு தண்ணீா் லாரி செளமியா மீது மோதியது. இதில் செளமியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, செளமியா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் வழக்குப் பதிவு செய்து, லாரியின் ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் பகுதியைச் சோ்ந்த வெ.காா்த்திகேயன் (41) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.