செய்திகள் :

சென்னை: சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த 5 பேர் - கேரள நடிகை சிக்கிய பின்னணி!

post image

கடநத 2014-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் அந்த கேரள சிறுமி. இவரின் சித்தி மகள் நடிகை மீனு குரியன் (Meenu kuriyan). பள்ளி விடுமுறையிலிருந்த சிறுமியை நடிகை, கேரளாவிலிருந்து சென்னை அண்ணாநகருக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக நடிகை மீனு குரியன் கூறியதாக தெரிகிறது. அதையொட்டி சிறுமியை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் நடிகை மீனு குரியன். அங்கு நடிகைக்குத் தெரிந்த 5 பேர் வந்திருந்தனர். அவர்களிடம் சிறுமிக்கு நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார் நடிகை . அப்போது அந்த 5 பேரில் ஒருவர், சிறுமியின் கன்னத்தை கிள்ளியிருக்கிறார். இன்னொரு நபர், சிறுமியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறார். இவர்களின் இந்த பாலியல் டார்ச்சரால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். இநதச் சம்பவம் நடக்கும் போது அவர் சிறுமி என்பதால் தைரியமாக காவல் நிலையத்தில் புகாரளிக்கவில்லை

நடிகை மீனு குரியன்

. இதையடுத்து தற்போது சிறுமிக்கு திருமணமான நிலையில் தனக்கு 2014-ம் ஆண்டு சித்தி மகளான தன்னுடைய சகோதரி நடிகை மீனு குரியன் அறிமுகப்படுத்தியவர்களால் நடந்த பாலியல் டார்ச்சர் குறித்து குடும்பத்தினரிடம் கூறி கதறி அழுதிருக்கிறார். இதுகுறித்து கடந்த 2024 -ம் ஆண்டு எர்ணாகுளம் மூவாட்டு புழா காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சம்பவம் நடந்த இடம் சென்னை அண்ணாநகர் என்பதால் இந்த வழக்கு கேரளாவிலிருந்து சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதனால் போலீஸார் புதிதாக வழக்குப்பதிந்து புகார் கொடுத்த பெண்ணிடம் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீஸார், கேரளாவுக்குச் சென்று பாலியல் டார்ச்சருக்கு காரணமாக இருந்த நடிகை மீனு குரியனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் விசாரணைக்குப்பிறகு நடிகை மீனு குரியன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது; பின்னணி என்ன?

திண்டுக்கல்லில் பட்டறை சரவணன், அல்லா ஆசிக் ஆகிய 2 ரவுடி கும்பல்களுக்கிடையே மோதல் காரணமாக பட்டறை சரவணன் கொலை செய்யப்பட்டார். அதன் பின்பு பட்டறை சரவணன் கும்பலுக்கும், அல்லா ஆசிக் கும்பலுக்கும் இடையே ஏற்... மேலும் பார்க்க

தேனி: பள்ளியில் ஈட்டி குத்தி காயமடைந்த சிறுவன்; சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு!

தேனி மாவட்டம் கோம்பை துரைச்சாமிபுரம் பகுதியைச் சார்ந்தவர்கள் சந்திரன் - சுகன்யா தம்பதியர். இவர்களது மகன் சாய் பிரகாஷ் (13) உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் த... மேலும் பார்க்க

சென்னை: கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி - சிறைக்கு சென்ற பின்னணி

சென்னை, கொளத்தூர், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் காதர் பாஷா (42). இவரின் மனைவி நிலவர் நிஷா. கடந்த 10.04.2025-ம் தேதி அதிகாலை காதர் பாஷா தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துவழிவிட்டான் என்பவரின் வீட்டு... மேலும் பார்க்க

சென்னை: பாலியல் சீண்டல்? - முதியவர் கொலையில் திருநங்கை கைது!

சென்னை, அபிராமபுரம், விசாலாட்சி தோட்டம் பகுதியில் யாசகம் செய்து வந்தவர் சேகர் (57). இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த 07.08.2025-ம் தேதி இரவு விசாலாட்சி தோட்டம் பகுதியில் சேகர் நின்றுக் கொண்டிருந்தார். ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காவல் நிலையம் அருகில் இளைஞர் படுகொலை - திமுக கவுன்சிலர் கைது; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கவுன்சிலரின் கணவன் சுதாகர்ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள அம்மனூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் அஸ்வினி (வயது 36). இவரின் கணவன் சுதாகர் (வயது 45) ஃபைனான்ஸ் விட்டு வட்டி வச... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்த நாட்டு வெடி; 2 மாணவர்கள் காயம்; என்ன நடந்தது?

தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் திருச்செந்தூர... மேலும் பார்க்க