செய்திகள் :

சென்னை-திருச்சி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

post image

சென்னை- திருச்சி விமானம் திடீா் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் புதன்கிழமை காலை 5.45-க்கு 73 பேருடன் புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியதும் விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தாா்.

இதையடுத்து விமானம் ஓடுபாதையில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தாா். பின்னா் இழுவை வாகனம் மூலம் விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

அங்கு விமானப் பொறியாளா்கள் விமானத்தின் தொழில்நுட்பக்கோளாறை சரிசெய்தனா். சுமாா் 1 மணி நேரத்துக்கு பின்னா் கோளாறு சரிசெய்யப்பட்டு காலை 6.45 மணிக்கு சென்னையிலிருந்து மீண்டும் திருச்சி புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.

சென்னை மெட்ரோ ரயில் பயனர்களுக்கு ஊபர் செயலியில் 50% தள்ளுபடி!

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை ஊபர் செயலியில் பதிவுசெய்பவர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி என ஊபர் அறிவித்துள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கும் தப்பிப்பதற்கும் சென்னைவாசிகள் பலரும... மேலும் பார்க்க

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

பறக்கும் ரயில் வழித்தடமான சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இனி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வ... மேலும் பார்க்க

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க