செய்திகள் :

சென்னை: பெட்டிக்கடை பெண்ணிடம் செயின் பறிப்பு; கைவரிசை காட்டிய தம்பதியை மடக்கிப் பிடித்த மக்கள்!

post image

சென்னை கே.கே.நகர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரின் மனைவி காந்தா (52). இவர்கள் மணப்பாக்கம், பார்த்தசாரதி நகரில் காய்கறி, கூல்டிரிங்க்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 22-ம் தேதி மதியம், கடையில் காந்தா தனியாக இருந்தார். அப்போது கடையின் முன்பு பைக்கை நிறுத்திய ஆண், பின்னால் அமர்ந்திருந்த பெண்ணிடம் கூல்டிரிங்க்ஸ் வாங்கிவருமாறு கூறியிருக்கிறார். உடனே அந்தப் பெண்ணும் பைக்கை விட்டு கீழே இறங்கி காந்தாவிடம் கூல்டிரிங்க்ஸ் கேட்டிருக்கிறார். அதனால், கூல்டிரிங்க்ஸை காந்தா கொடுக்க அதை வாங்குவதைப் போல கையை நீட்டிய அந்தப் பெண், மின்னல் வேகத்தில் காந்தா அணிந்திருந்த தங்கச் செயினைப் பறித்தார். பின்னர் பைக்கில் தயாராக நின்றுக் கொண்டிருந்த ஆணோடு தப்பிச் செல்ல முயன்றார்.

ஜானி

அதனால் அதிர்ச்சியடைந்த காந்தா, திருடி திருடி என சத்தம் போட்டார். உடனே அந்தப் பகுதியிலிருந்தவர்கள் பைக்கை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இருவரிடமும் போலீஸார் விசாரித்தபோது செயினைப் பறித்த பெண்ணின் பெயர் ஆயிஷா பேகம் (30), சென்னை மணப்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. செயின் பறிப்பின் போது ஆயிஷா பேகத்துடன் வந்தவர் அவரின் கணவர் ஜானி (35) என விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்குப்பிறகு கணவன், மனைவியை செயின்பறிப்பு வழக்கில் கைது செய்த போலீஸார் தங்கச் செயினையும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

கேரள தொழிலதிபர் மனைவியுடன் கோடாரியால் வெட்டி கொலை; அஸ்ஸாம் இளைஞரிடம் விசாரணை; பின்னணி என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் திருவாதக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலதிபரான விஜயகுமாரும் அவரது மனைவி மீராவும் பெரிய பங்களாவில் வசித்துவந்தனர்.இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 22) காலை அவரது வீட்டுக்கு வ... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி; கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்; பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.அப்போது, நம்மிடம் பேசியவர்கள், ... மேலும் பார்க்க

Elephant: ``சுற்றுலா பயணிகளின் அத்துமீறலால் பரிதாபமாக உயிரிழந்த பெண்..'' - வனத்துறை சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுமார் 55 வயதான சரசு. தபால்துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த இவர் தன்னுடைய கணவருடன் நேற்று முன்தினம் மாலை பொக்காபுரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு ... மேலும் பார்க்க

`16-ம் தேதி திருமணம்.. 22-ம் தேதி கடற்படை அதிகாரி பலி' - ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் நடந்த கொடூரம்

ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடற்படையில் பணியில் சேர்ந்தார்.இவருக்கு கடந்த 16-ம் தேதி திருமணமும், 19-ம் தேதி திரும... மேலும் பார்க்க

Jammu - Kashmir: உளவுத்துறை அதிகாரி உள்பட 28 பேர் பலி!; ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக அதி... மேலும் பார்க்க

காஷ்மீர் தாக்குதல்: `இதுவரை 28 பேர் பலி' - தாக்குதலுக்கு பின்னணியில் யார்?

நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் தெற்கு காஷ்மீருக்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதுவரை வெளியான தகவலின் படி, இந்தத் துப்பாக்கி சூட்டில் கிட்டதட்ட 28 பேர் உ... மேலும் பார்க்க