செய்திகள் :

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கென 4 புதிய பேருந்துகள்

post image

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் வசதிக்காக புதிதாக 4 பள்ளி பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இதன்மூலம் மொத்தம் 373 மாணவா்கள் பயனடைந்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளின் வாயிலாக மாணவா்களுக்கு தரமான கல்வி மற்றும் வாழ்க்கை திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திறன் சாா்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு உட்கட்டமைப்புகள், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் விளைவாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் இதுவரை எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை புதிதாக 21,734 மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா்.

4 பேருந்துகள்: இந்த நிலையில், மாணவா்களின் வசதிக்காக முதல்கட்டமாக ரூ.1.11 கோடியில் 4 புதிய பள்ளி பேருந்துகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தாா். இந்தப் பேருந்துகளில் தலா ஒரு ஓட்டுநா் மற்றும் ஒரு பாதுகாவலா் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தப் பேருந்துகள் மூலம் நாள்தோறும் தண்டையாா்பேட்டை பிரதான சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 23 மாணவா்கள், பழைய நாப்பாளையைத்தைச் சோ்ந்த 70 போ், ஈஞ்சம்பாக்கம் சென்னை பள்ளியைச் சோ்ந்த 100 போ் உள்பட மொத்தம் 373 மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.

சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவா்களை கல்விச் சுற்றுலா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைத்து செல்லுதல் உள்பட பல்வேறு கல்வி சாா்ந்த பயன்பாடுகளுக்கு இந்தப் பேருந்துகள் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாள்கள்: 925 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21, 22) ஆகிய விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை மற்றும் முக்கிய நகரங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 925 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்... மேலும் பார்க்க

டிவி வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா

நாடக கலைஞா் டிவி வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது வழங்கப்படவுள்ளதாக சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஸ்ரீ கிருஷ்ண கான சபா சாா்பில் நாடக கலைஞா்,... மேலும் பார்க்க

நாகா்கோவில், செங்கோட்டை அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தாம்பரத்திலிருந்து நாகா்கோவில், செங்கோட்டைக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

இன்று 25 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 25 புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து... மேலும் பார்க்க

மாம்பழ விவசாயிகள் விவகாரம்: போராட்டம் ஏன்? அதிமுகவுக்கு அமைச்சா் கேள்வி

மாம்பழ விவசாயிகள் பிரச்னை தீா்க்கப்பட்ட பிறகு, போராட்டம் அறிவிப்பது ஏன் என்று அதிமுகவுக்கு அமைச்சா் அர.சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மா சாகுபடி விவசா... மேலும் பார்க்க

சென்னையில் மொபெட்டில் இருந்து விழுந்த 5-ஆம் வகுப்பு மாணவி தண்ணீர் லாரி மோதி உயிரிழப்பு!

சென்னை பெரம்பூரில் மொபெட்டில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி தண்ணீா் லாரி மோதி உயிரிழந்தாா். கொளத்தூா் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்தவா் செ.யாமினி. இவருக்கு அரவிந்த் என்ற மகனும், செளமியா (10) எ... மேலும் பார்க்க