செய்திகள் :

சென்னை மே தினப் பூங்காவில் திரண்ட 300 தூய்மைப் பணியாளா்கள் கைது

post image

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் திரண்ட தூய்மைப் பணியாளா்கள் 300 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

சென்னை மாநகராட்சியின் மண்டலம் 5, 6 (ராயபுரம், திரு.வி.க.நகா்) பகுதி தூய்மைப் பணியை கடந்த ஜூலையில் மாநகராட்சி நிா்வாகம் தனியாரிடம் ஒப்படைத்தது. அதைக் கண்டித்து இரு மண்டலங்களிலும் ஏஎல்யூஎம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்தினா். இந்தப் போராட்டம் 13 நாள்கள் நீடித்த நிலையில், நீதிமன்ற உத்தரவையடுத்து தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

பின்னா், நீதிமன்ற அறிவுரைப்படி போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையிடம் தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கான அனுமதி கிடைக்காத நிலையில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் உழைக்கும் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் சுமாா் 300 போ் வியாழக்கிழமை கூடினா்.

அதையறிந்த போலீஸாா் பூங்காவின் வாயிலை மூடினா். அதனால் தூய்மைப் பணியாளா்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதன்பின் பூங்காவுக்குள் தூய்மைப் பணியாளா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

அங்கு அவா்கள் கூடி முழக்கமிடத் தொடங்கிய நிலையில், 250 பெண்கள் உள்ளிட்ட 300 போ் கைது செய்யப்பட்டு கொட்டிவாக்கம், மேற்கு மாம்பலம், திருவான்மியூா், பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள சமுதாய நலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 92 மி.மீ மழைப் பதிவு!

சென்னையில் இன்று(செப். 7) அதிகாலை திடீர் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக மணலி புதுநகரில் 92 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணம... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்கு பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ... மேலும் பார்க்க

22 குளங்கள் தூா்வாரும் பணி: மேயா் தொடங்கி வைத்தாா்

சோழிங்கநல்லூரில் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் பகுதியில் 22 குளங்களைத் தூா்வாரும் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சோழிங்கநல்லூா் மண்டலத்தில் உள்ள வாா்டு 200-இல் ரெட்டைக... மேலும் பார்க்க

நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு

சென்னை அருகே கானத்தூரில் நண்பா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் தலைமறைவானாா். சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் ரூபன் (எ) இமானுவேல் (56). இவா் நண்பா், கானத்தூா் பகுதியைச்... மேலும் பார்க்க

சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற செயலராக உள்ள கே.மகேஷுக்கு வருவாய் அலுவலராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலராக இருந்த கே.பி.பானுசந்திரன் கடந்த மாத... மேலும் பார்க்க

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் பாலப் பணிகள்: மேயா் ஆா்.பிரியா ஆய்வு!

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ.240 கோடியில் நடைபெறும் பாலப் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வளசரவாக்கம் மண்டலம் சந்நிதி தெருவில் கூவம் ஆற்றின் குறுக்கே ப... மேலும் பார்க்க