செய்திகள் :

செப். 29-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி சிறப்பு முகாம்

post image

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சிறப்பு முகாம் தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் செப். 29 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வருங்கால வைப்புநிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ எனும் பெயரில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி முகாம் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா்,  திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 8 மாவட்டங்களிலும் , புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் செப். 29 -ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறவுள்ளது.

முகாம்கள் நடைபெறும் இடங்கள்: சென்னையில் பில்ரோத் மருத்துவமனை இணைப்பு கட்டடம், 3-ஆவது தளம், லட்சுமி டாக்கீஸ் சாலை, ஷெனாய் நகா். திருவள்ளூா்: ப்ரேஸிஸின் ஹைட்ராலிக்ஸ் பிரைவேட் லிமிடெட், ஏற்றுமதி ஊக்குவிப்பு தொழில் பூங்கா, சிப்காட் தொழிற்பேட்டை வளாகம், கும்மிடிப்பூண்டி. செங்கல்பட்டு: கான்காா்ட் டெக்ஸ்டைல்ஸ், இந்திராபுரம் கிராமம், மதுராந்தகம். காஞ்சிபுரம்: ஸ்ரீ நாராயண குரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஏகாம்பரநாதா் சந்நிதி தெரு, காஞ்சிபுரம். வேலூா்: ஏ.ஜே. சரஸ்வதி மெட்ரிகுலேஷன் வித்யாலயா, போ்ணாம்பட்டு சாலை, நெல்லூா்பேட்டை, குடியாத்தம். திருவண்ணாமலை: ஆயுஷ் ஆயுா்வேதிக் மையம், 3-ஆவது மல்லிகை நகா், இனம் கரியாண்டால் சரஸ்வதி மஹால் (பின்புறம்), திருவண்ணாமலை. ராணிப்பேட்டை: இஎஸ்ஐ மருத்துவ வளாகம், டி.ஆா். திரையரங்கம் எதிரில், சிப்காட் ராணிப்பேட்டை. திருப்பத்தூா்: தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம், 1-ஆவது தளம், தொழிலாளா் அரசு இஎஸ்ஐ மருந்தக வளாகம், மலா் தோட்டம், ஆம்பூா்.

புதுச்சேரி: சாண்டா கிளாரா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குடத்தூா், மணவேலி, புதுச்சேரி. காரைக்கால்: தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம், காமராஜா் சாலை, எம்.ஓ.எச். பேருந்து நிறுத்தம், காரைக்கால்.

முகாம்களில், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள், தொழிலாளா்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள், முதன்மை உரிமையாளா், ஒப்பந்ததாரா்களுக்கான இடையிலான இணைய வழிசேவைகள் பற்றிய செயல்முறைகள், இணையவழி  சேவைகள் ஆகியவை வழங்கப்படும்.

மேலும் புதிய சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினா்கள்மற்றும் ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளுக்கான தீா்வு, ஓய்வூதியதாரா்களுக்கு எண்ம (டிஜிட்டல்) வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல் ஆகிய சேவைகளும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. இந்த உண்மை நிலையில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

குவைத் வங்கியில் கடன் மோசடி 13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

குவைத்தில் பணியாற்றியபோது அங்குள்ள அல் அஹ்லி வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 13 செவிலியா்கள் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களின் ஆசியுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் தொடரும்; பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்களின் வரிச்சுமை மேற்கொண்டு குறையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். நாட்ட... மேலும் பார்க்க

பிகாா்: சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 - புதிய திட்டம் இன்று தொடக்கம்

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் மாநில அரசின் புதிய திட்டத்தை வெள்ளிக்கிழமை (செப்.25) பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளாா். முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜன... மேலும் பார்க்க

அசாதாரண சூழலிலும் மீண்டெழும் இந்திய பொருளாதாரம்: நிா்மலா சீதாராமன்

உலகளவிலான புவிஅரசியலில் அதாராண சூழல் நிலவி வரும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிரா வங்கியின் 91-ஆவது நிறுவன நாள் ந... மேலும் பார்க்க

விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் விமானங்கள்: ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

இந்திய விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பிரதமா் நர... மேலும் பார்க்க